#BREAKING : 2 நிறுவனங்கள் ரூ.250 கோடி வருமானத்தை மறைத்து அம்பலம்…! வருமானவரித்துறை அதிகாரிகள் அறிக்கை…!

Published by
லீனா

காஞ்சிபுரத்தை சேர்ந்த பட்டு சேலை நிறுவனத்திடம் ரூ.100 கோடியும், நிதி நிறுவனத்திடம் ரூ.150 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

கடந்த 5-ஆம் தேதி சென்னை, காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட 34 இடங்களில் 3 நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அதில் குறிப்பாக, பச்சையப்பாஸ் சில்க், எஸ்கேபி நிதி நிறுவனம், செங்கல்வராயன் சில்க் ஆகிய 3 நிறுவனங்கள் தொடர்பான 34 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில், 3 நிறுவனங்களில் தனித்தனியாக ஆவணங்கள்  கைப்பற்றப்பட்டுள்ளது. அதில், எஸ்கேபி சிட்பண்ட் நிறுவனத்தில் குறுகிய காலத்தில் ரூ.400 கோடி சம்பாதித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான கணக்கையும் அவர்கள் மறைத்திருப்பதாகவும், அவர்களிடம் இருந்து கடனாக பெற்றவர்களுடைய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் கணக்கில் வராத ரூ.1.35 கோடி பணமும், 7.5 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதே போல் 2  துணி கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில், ரூ.44 லட்சம் பணமும், 9.5 கிலோ தங்கமும் சிக்கியுள்ளதாக  வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காஞ்சிபுரத்தை சேர்ந்த பட்டு சேலை நிறுவனத்திடம் ரூ.100 கோடியும், நிதி நிறுவனத்திடம் ரூ.150 கோடியும் வருவாயை மறைத்ததாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த 3 நிறுவனங்களிடம் பறிமுதல் செய்யபட்ட ரொக்கம், நகை மற்றும் ஆவணங்கள் தொடர்பாக வரும் நாட்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

Recent Posts

ஆஹா! கோவிலுக்கு இயந்திர யானை வழங்கிய த்ரிஷா…குவியும் வாழ்த்துக்கள்!

ஆஹா! கோவிலுக்கு இயந்திர யானை வழங்கிய த்ரிஷா…குவியும் வாழ்த்துக்கள்!

விருதுநகர் : மாவட்டம், அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் திருக்கோயில் மற்றும்…

30 minutes ago

சிறுவன் கடத்தல் வழக்கு : பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவு!

திருவள்ளூர் :மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம்…

1 hour ago

இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு! டெல்டா வெதர்மேன் கொடுத்த அலர்ட்!

சென்னை : டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் இன்றயை வானிலை தொடர்பான தகவலை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த தகவலின் படி, தென்மேற்கு…

1 hour ago

ஈரான் தலைவர் உயிரை காப்பாற்றியதே நான் தான்! – ட்ரம்ப் போட்ட பதிவு!

வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான 12 நாள் மோதலின்போது, இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு காமெனியை குறிவைத்து தாக்குதல் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால்…

2 hours ago

அண்ணாமலை பாஜக தேசிய பொதுச்செயலாளராக நியமனம்? குவியும் வாழ்த்துக்கள்!

டெல்லி : தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, பாஜகவின் தேசிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதாக கர்நாடக பாஜக…

3 hours ago

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…

15 hours ago