பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!
அவன் படம் நடிக்கிரனு சொன்னப்போ சந்தோஷபட்ட அதே சமயம் பயப்படவும் செஞ்சேன் என மகன் குறித்து விஜய் சேதுபதி பேசியுள்ளார்.

சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த படத்தின் டிசர் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருந்தது. அது மட்டுமன்றி, படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது அப்பா வேற நான் வேற என சூர்யா விஜய் சேதுபதி பேசியது ஒரு பக்கம் விமர்சனமும் ஆனது.
அந்த விமர்சனங்களால் மனமுடைந்த சூர்யா விஜய் சேதுபதி நான் பேசியது தவறு தான் என அடுத்ததாக வருத்தமும் தெரிவித்தார். இருப்பினும் அவர் மீது எழுந்த விமர்சனங்கள் மற்றும் நிற்கவில்லை என்று சொல்லலாம். விமர்சனங்களை கவனத்தில் எடுத்துக்கொள்ளலாம் சூர்யா விஜய் சேதுபதி படத்தில் கவனத்தை செலுத்தி படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த திரைப்படம் வரும் ஜூலை 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில்,படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின், இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக விஜய் சேதுபதி கலந்துகொண்டு மகன் ஹீரோவானது குறித்து பேசினார்.
இது குறித்து பேசிய அவர் ” சூர்யா, இதற்கு முன்பு ‘நானும் ரவுடி தான்’ மற்றும் ‘சிந்துபாத்’ படங்களில் சிறு வேடங்களில் என்னுடைய மகன் நடித்திருந்தார். இப்போது ஹீரோவாக நடித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. படத்தின் இயக்குனர் என்னிடமே ஒரு முறை எனக்கு ஒரு கதை சொல்லிருக்கிறார். அடுத்து ஒரு கதையை எழுதி என்னுடைய மகனிடம் கூறினார். கதையை நான் கேட்டேன் எனக்கும் மிகவும் பிடித்திருந்தது.
ஹீரோவாக என்னுடைய மகன் நடிக்கிறான் என்று தெரிந்தவுடன் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது போல கொஞ்சம் பயமும் இருந்தது. ஏனென்றால், மக்கள் அவனை எப்படி ஏற்றுக்கொள்ள போகிறார்கள் என்று தெரியவில்லை. என்னுடைய முதல் படத்தின் இசை வெளியீட்டு விழா பக்கத்தில் உள்ள ஒரு மைதானத்தில் நடைபெற்றது. அப்போது எனக்கு எந்த அளவுக்கு பயம் இருந்ததோ அதைப்போலவே இப்போது பல மடங்கு இருக்கிறது.
கண்டிப்பாக மக்கள் என்னுடைய மகனை ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன். படத்தில் சிறப்பாக அவர் நடித்திருக்கிறார். அவர் மட்டுமில்லை படத்துல நடிச்ச எல்லாருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். நான் படம் பார்த்தேன் நன்றாக இருந்த்தது. நீங்களும் படத்தை வந்து பாருங்கள்” எனவும் விஜய் சேதுபதி பேசினார். விஜய் சேதுபதி, தனது மகனின் முதல் பெரிய வாய்ப்புக்கு ஆதரவு தெரிவித்தாலும், அவர் மீதான எதிர்பார்ப்பு மற்றும் பயத்தை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டது ரசிகர்களிடையே பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது.