தமிழக அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கியது.
இந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் 24 மணி நேர தடுப்பூசி திட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியம் தமிழகத்தில் 55 மருவத்துவனை வளாகங்களில் 24 மணி நேரமும் தடுப்பூசி போடப்படும். அரசு மருத்துவ கல்லுரி மருத்துவமனை, அரசு தலைமை மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் தடுப்பூசி போடப்படும்.
சென்னையில் ராஜீவ்காந்தி, ஓமந்தூரார் , ராயப்பேட்டை, ஸ்டான்லி, கீழ்பாக்கம் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடப்படும். தளர்வுகள் அளிக்கப்பட்டதால் மக்கள் அஜாக்கிரதையாக இல்லாமல் கவனமாக இருக்க வேண்டும் என தெரிவித்தார். தமிழ்நாட்டில் 4 லட்சம் பேர், கோவாக்சின் 2-வது தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை. அப்பல்லோ மருத்துவமனையில் 5 லட்சம் கோவாக்சின் தடுப்பூசி உள்ளது.
ஓரிரு நாட்களில் அப்பல்லோ மருத்துவமனையில் கோவாக்சின் 2-வது டோஸ் இலவசமாக போடப்படும் என தெரிவித்தார்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…