தமிழகத்தில் அதிரடியாக 9 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகளை இடம் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, காவலர் பயிற்சி துறையில் இருந்த ஷகில் அக்தர், சிபிசிஐடிக்கு டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிறப்பு நிர்வாக டிஜிபியாக இருந்த கந்தசாமி, ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு டிஜிபியாக பணியிட மாற்றம்.
சிறப்பு அதிரடிப்படை ஏடிஜிபி ரவி, சென்னை காவல்துறை நிர்வாக டிஜிபியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். உளவுத்துறை ஐஜி ஈஸ்வர மூர்த்தி, சென்னை உளவுத்துறை பிரிவு ஐஜியாகவும், காவல்துறை தொழில்நுட்ப பிரிவு டிஜிபி ஆசியம்மாள், உளவுத்துறை டிஜிபியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன், எஸ்பிசிஐடியாக சென்னை பணியிட மாற்றம். தூத்துக்குடி காவலர் பயிற்சி பள்ளி எஸ்பி சரவணன், குற்றப்பிரிவு உளவுத்துறை எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பாதுகாப்பு பிரிவு சிஐடி-I எஸ்பி திருநாவுக்கரசு மற்றும் பாதுகாப்புப்பிரிவு சிஐடி-II எஸ்பி சாமிநாதன் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை : தமிழகத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி இன்று (ஜூலை 07,…
பர்மிங்ஹாம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபேற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள்…
தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விண்ணை முட்டும் அரோகரா முழக்கத்துடன் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் வெள்ளத்திற்கு…
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…