தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மாணவி தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றம் வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்த நிலையில், தற்போது அந்த வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்து உயர்நீதிமன்றம் மதுரை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவி தஞ்சையில் படித்து வந்த நிலையில், சமீபத்தில் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார். மதம் மாற சொல்லி கட்டாயப்படுத்தியதால் தான், மாணவி தற்கொலை செய்து கொண்டதாக குற்றசாட்டு எழுந்த நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று மாணவியின் பெற்றோர் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டதை தொடர்ந்து, மாணவி தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்யபட்டுள்ளது.
மாணவி தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்து, உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இன்று வழக்கு பட்டியலிடப்படாத நிலையிலும் அவசர அவசரமாக வழக்கை எடுத்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
செல்போனை காவல்துறையினர் பெற்ற உடனேயே தடய அறிவியல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளன என அரசு தரப்பில் தெரிவிக்கப்ட்டுள்ளது. இதனிடையே, மதம் மாற கட்டாயப்படுத்தியதால்தான் மாணவி தற்கொலை செய்துகொண்டதாக பாஜக குற்றசாட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…