அரசுப் பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படாது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 4-ம் கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று முதல் மாவட்டத்திற்குள் பேருந்துகள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் பொதுப் போக்குவரத்து மீண்டும் துவங்கப்பட்டு உள்ளதால் சென்னை சென்ட்ரல் பேருந்து பணிமனையில் போக்குவரத்துறை அமைச்சர் எம் .ஆர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர், மாவட்ட எல்லையில் உள்ள பேருந்து நிறுத்தம் வரை அரசு பேருந்துகள் இயக்கப்படும், அடுத்த மாவட்டத்திற்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக மாவட்டம் எல்லை வரை பேருந்துகள் இயக்கப்படுகிறது. இரவு 9 மணி வரை மட்டுமே அரசு பேருந்துகள் இயங்கும் என அமைச்சர் எம். ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மேலும், மார்ச் மாதம் எடுக்கப்பட்ட ஆயிரம் ரூபாய்க்கான எனவும் மாதாந்திர பேருந்து பயணச்சீட்டு புதிதாக கொடுக்க தொடங்கி விட்டோம் என தெரிவித்தார். பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு பேருந்துகள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். அறிகுறிகள் இருந்தால் மட்டுமே ஓட்டுனர், நடத்துனர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
அரசு பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படுவதாக கூறுவது தவறு, அரசுப் பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படாது என கூறினார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…