BREAKING: பிரதமரிடம் ரூ.1000 கோடி கூடுதல் நிதி ஒதுக்க முதல்வர் கோரிக்கை.!

Published by
murugan

தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக  தமிழகத்திற்கு கூடுதலாக ஆயிரம் கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் பழனிசாமி  கோரிக்கை விடுத்துள்ளார். 

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால் இந்தியாவில் இன்று வரை 7447 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 643 பேர் குணமடைந்துள்ளதாகவும் , 239 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த கொரோனா தொற்று சமூக பரவலாக மாறாமல் இருக்க  21 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தற்போது அமலில் உள்ளது.இந்நிலையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பல  மாநில முதல்வர்கள் நோய் பரவலை தடுக்க ஊரடங்கு நீட்டிக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் இன்று அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொளி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.இந்த காணொளி ஆலோசனை கூட்டத்தில்  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி , தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக  தமிழகத்திற்கு கூடுதலாக ஆயிரம் கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம்  கோரிக்கை விடுத்துள்ளார். 

பருப்பு , மசாலா பொருட்கள் போன்றவை மாநிலங்களுக்கு இடையே லாரிகள் மூலம் விநியோகிக்கப்பட வேண்டும்  என்றும் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

Published by
murugan

Recent Posts

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஜூலை 1-ஆம் தேதி முதல் மற்றும் 02-07-2025: தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும்,…

2 minutes ago

ரயில்வே துறை அறிவித்த ரயில் கட்டண உயர்வு இன்று முதல் அமல்!

டெல்லி : இந்திய ரயில்வே அமைச்சகம், நாடு முழுவதும் ரயில் கட்டண உயர்வு 2025 ஜூலை 1 (இன்று) முதல்…

45 minutes ago

திருப்புவனம் இளைஞர் மரணம் : “தப்ப முயன்றபோது வலிப்பு”… FIR-ல் அதிர்ச்சி தகவல்!

சிவகங்கை :  மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை…

1 hour ago

நாளை முதல் Swiggy – Zomato ஆர்டர் கிடையாது? ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு.!

சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…

10 hours ago

இங்கிலாந்து அணியின் ஆலோசகராக இணைந்தார் மொயீன் அலி.!

இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…

11 hours ago

ஓடுபாதையில் கோளாறு.., பெங்களூரு புறப்பட்ட புதுச்சேரி இண்டிகோ விமானம் ரத்து.!

புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…

12 hours ago