#BREAKING: கூட்டணி வேட்பாளர்களுக்கு சின்னம் தர தடையில்லை – உயர்நீதிமன்றம்

Published by
பாலா கலியமூர்த்தி

அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் சின்னத்தை கூட்டணிக்கு ஒதுக்கீடு செய்வதை தடுப்பது தற்போது சாத்தியமில்லை என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

திருச்செந்தூரை சேர்ந்த என்பவர் பொதுநல வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்திருந்தார். அதில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் சின்னத்தை அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கும் நடைமுறை தொடர்கிறது. இது தேர்தல் ஆணையம் விதிமுறைகளுக்கு எதிரானது. எனவே அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் சின்னத்தை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க கூடாது என தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின்போது, வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கான சின்னங்கள் ஒதுக்கும் பணி நிறைவடைந்து உள்ளதால், இந்த தேர்தலில் மனுதாரர் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என தெரிவித்துள்ளனர். அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் சின்னத்தை கூட்டணி வேட்பாளர்களுக்கு ஒதுக்கீடு செய்வதை தடுப்பது தற்போது சாத்தியமில்லை என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், மனுதாரர் கோரிக்கை குறித்து விரிவான பதில் மனுவை தேர்தல் முடிந்த பிறகு ஜூன் மாதம் மூன்றாவது வாரத்தில் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அடுத்தடுத்த தேர்தலில் இது அமல்படுத்துவது சாத்தியமா என்பதை தேர்தல் ஆணையம் விரிவாக விளக்க எனவும் உத்தரவிட்டு, இந்த வழக்கை ஜூன் மூன்றாவது வாரத்திற்கு ஒத்திவைத்து என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

5 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

6 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

7 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

8 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

10 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

11 hours ago