#Breaking: ஒரே நாளில் 827 பேருக்கு கொரோனா; 12 பேர் உயிரிழப்பு.!

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழகத்தில் இன்று 827 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை 19,372 ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் இன்று மேலும் 827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதனால், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 19,372 ஆக அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் இன்று மட்டும் 559 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 12,762 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று கொரோனாவுக்கு 12 பேர் உயிரிழந்த நிலையில், மொத்தம் பலி எண்ணிக்கை 145 ஆக உயர்ந்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் இன்று 639 பேர் கொரோனா வைரஸில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை கொரோனாவில் இருந்து 10,548 பேர் குணமடைந்துள்ளனர். இன்று பாதிக்கப்பட்ட 827 பேரில் 117 பேர் வெளிமாநிலத்தில் இருந்துவந்தவர்கள் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். மேலும், எண்ணிக்கையை வைத்து அரசியல் செய்ய வேண்டாம். இது ஒரு நோய் உலகம் முழுவதும் உள்ளது. அதிகப்படியான பரிசோதனைகள் செய்வதால் தான் அதிக அளவில் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார். 

இதுவரை தமிழகத்தில் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் 1,253 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், 936 பேர் மஹரஸ்தாவில் இருந்து வந்தவர்கள் என அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், பிரான்ஸ் 15%, இத்தாலி 14%, இங்கிலாந்து 14% போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு விகிதம் 0.7% என மிகக் குறைவானதாகவே உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

இன்று ஒரே நாளில் 12,246 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 4,55,216 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. தற்போது மருத்துவமனையில் 8,676 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும், ராஜிவ் காந்தி மருத்துவமனையில் 7 பேருக்கு பிளாஸ்மா பரிசோதனை செய்யப்பட்டு குணமடைந்து உள்ளனர் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

2 days ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

2 days ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

2 days ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

2 days ago