#Breaking: தமிழகத்தில் மேலும் 447 பேருக்கு கொரோனா.!

தமிழகத்தில் இன்று மேலும் 447 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை இதுவரை 9,674 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று மேலும் 447 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, கொரோனாவால் 9,227 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 9,674 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 363 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அங்கு மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 5,625 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று மேலும் 2 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் உயிரிழப்பின் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளது. இன்று 64 பேர் கொரோனா வைரஸில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் 2,240 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
‘சங்க காலத்தின் வாழ்வியல் கீழடியில் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது’ – மு.க.ஸ்டாலின்.!
June 29, 2025
2026 தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வது என மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு.!
June 29, 2025