சென்னையில் உள்ள சொகுசு விடுதியில், ஓ.பன்னீர் செல்வத்தை, எடப்பாடி பழனிசாமி அவர்கள் சந்திக்கிறார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைச் செயலகத்தில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், சென்னை மற்றும் புறநகர் மாவட்ட செயலாளர்களுடன் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை மேற்கொண்டார்.
இந்நிலையில், நேற்று நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்காமல் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் புறக்கணித்துள்ளார். இதனால், அதிமுகவினர் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ஈபிஎஸ் – ஓபிஎஸ் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில், நேற்று ஓபிஎஸ் உடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என ஈபிஎஸ் விளக்கமளித்திருந்த நிலையில், இன்று சென்னையில் உள்ள சொகுசு விடுதியில், ஓ.பன்னீர் செல்வத்தை, எடப்பாடி பழனிசாமி அவர்கள் சந்திக்கிறார். இந்த சந்திப்பானது தங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்பதை காட்டுவதற்காக தான் நடைபெறுவதாக கூறப்படுகிறது.
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று பர்மிங்ஹாமில்…
வங்கதேசம் : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பங்களாதேஷின் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இன்று சர்வதேச குற்றவியல்…
எட்ஜ்பாஸ்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெறவுள்ள…
சென்னை : சேலம் மேற்கு தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) எம்.எல்.ஏ. அருளை கட்சியிலிருந்து நீக்குவதாக பாமக தலைவர்…
டெல்லி: முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ஒரு மாத ஊதியமாக ரூ.15,000 வரை இரண்டு தவணைகளில் வழங்கும் “வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் இளைஞர் அஜித்குமார் காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…