வாக்கு எண்ணிக்கை தினத்தன்று முழு ஊரடங்கு ஏற்கனவே அமலில் உள்ளது என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை தினத்தன்று முழு ஊரடங்கு ஏற்கனவே அமலில் உள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தாக கூறப்படுகிறது. தொழிலாளர் தினத்துக்கு பொதுவிடுமுறை என்பதால் மே 1ல் சனிக்கிழமை அன்று முழு ஊரடங்கிற்கு அவசியமில்லை என்றும் கூறியுள்ளது.
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மே 1 முதல் கொரோனா தடுப்பூசி போடுவதால் சனிக்கிழமை அன்று முழு ஊரடங்கு தேவையில்லை என்றும் மே 2ம் தேதி வாக்கு எண்ணும் நாளில் உரிய பாஸ் வைத்திருப்பவர்கள் தான் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.
இதுதொடர்பான வழக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தமிழக அரசு தனது இறுதி முடிவை நாளை தெரிவிக்க உயர் நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது. இதனிடையே, வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மே 01, 02-ஆம் தேதிகளில் முழு ஊரடங்கு தொடர்பாக தமிழக அரசே முடிவெடுக்கும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நிதி முறைகேடு செய்து விட்டதாக, சன் நெட்வொர்க்கின் தலைவரும், தனது சகோதரருமான கலாநிதி மாறனுக்கு, முன்னாள் மத்திய…
இஸ்ரேல் : ஈரானுடனான மோதல் காரணமாக தனது மகனின் திருமணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதாகவும், இது தனது குடும்பத்தினர் செலுத்திய…
சென்னை : தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மீது மேல் நடவடிக்கை எடுக்கஅமலாக்கத்துறைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக்…
சென்னை : சென்னை விமான நிலையத்தில் இன்று (ஜூன் 20) டெல்லி, மும்பை, மற்றும் தூத்துக்குடி செல்லும் 8 விமானங்கள்…
சென்னை : ஒவ்வொரு ஆண்டும் இன்று (ஜூன் 20) உலகம் முழுவதும் 'உலக அகதிகள் தினம்' என அனுசரிக்கப்படுகிறது. போர்,…
வாஷிங்டன் : சமீபத்தில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டிற்கு இறுதி நேரத்தில் அழைக்கப்பட்ட மோடி, டிரம்ப் உடன் பேச்சு வார்த்தை நடத்துவார்…