உலகப்புகழ் பெற்ற கள்ளழகர் மதுரை வைகையாற்றில் இறங்கும் நிகழ்வு இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது.கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளாக நடைபெறாத நிலையில்,வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வு இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் சூழ கோலாகலமாக நடைபெற்றது.
அதன்படி,பச்சைப்பட்டு உடுத்தி தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்து வைகை ஆற்றின் நடுவே அறநிலையத்துறை அமைந்திருந்த மண்டகப்படியில் கம்பீரமாக கள்ளழகர் எழுந்தருளினார்.இதனை காண வந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றில் இறங்கி தண்ணீரை பீய்ச்சி அடித்து ஆடி,பாடி மகிழ்ந்தனர்.
இந்நிலையில்,கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கிய போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பக்தர்கள் உயிரிழந்துள்ளனர்.ஒரு பெண் உட்பட இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில் அவர்களின் உடல்கள் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அசம்பாவிதம் ஏற்படக் கூடாது என்பதற்காக இன்று வைகை ஆற்றில் பக்தர்கள் இறங்க மாவட்ட ஆட்சியர் தடை விதித்திருந்தார். ஆனால்,அதனை மீறி ஏராளமானோர் ஆற்றில் இறங்கிய நிலையில், தற்போது கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்,கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் காயமடைந்துள்ள நிலையில் அவர்களும் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.அவர்களை வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி அவர்கள் நேரில் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து,நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்களின் விவரங்களை அறிய 9498042434 என்ற என்னை தொடர்பு கொள்ளுமாறு மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.மேலும்,கூட்ட நெரிசலில் சிக்கி யாரேனும் காணாமல் போயிருந்தாலும் தகவல் தெரிவிக்குமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
சென்னை : நேற்று முன் தினம் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
வாஷிங்டன் : ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், அங்கு பதற்றமான சூழ்நிலை…
அகமதாபாத் : நகரில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…
கர்நாடகா : காந்தாரா படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இரண்டாவது பாகம் படபிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ‘காந்தாரா-2’…
சென்னை : தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், வரவிருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி…
கனடா : கன்னாஸ்கிஸ் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில், இஸ்ரேல்-ஈரான் மோதல் தொடர்பாக முக்கியமான கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. ஈரான்…