அரசியல் ஆதாயத்துக்காக உருவாக்கப்பட்டுள்ள சமூகநீதி கூட்டமைப்பில் இணைய அதிமுக விரும்பவில்லை என முதல்வருக்கு ஓபிஎஸ் கடிதம்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அனைத்திந்திய சமூகநீதி கூட்டமைப்பில் இணையுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் உள்ளிட்ட 37 அரசியல் தலைவர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில் இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், அரசியல் ஆதாயத்துக்காக உருவாக்கப்பட்டுள்ள சமூகநீதி கூட்டமைப்பில் இணைய அதிமுக விரும்பவில்லை. ஒரு அமைப்பை தொடங்குவதற்கு முன் ஒத்த கருத்து கொண்டவர்களை அழைத்துப் பேசி விவாதிக்க வேண்டும். விவாதிக்காமல் அமைப்பை ஏற்படுத்தி விட்டு பிரதிநிதியை நியமிக்க கூறுவது கூட்டாட்சிக்கு முரணாக உள்ளது.
தங்களின் கடிதத்தை துருவித்துருவி பார்த்தபோது தமிழக மக்களின் நலன் எதுவும் இல்லை. நேரத்தை வீணடிப்பதை தவிர்த்து நீட் போன்ற மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்துங்கள். சமூகநீதியில் தான் இப்படி எனில் கூட்டாட்சித் தத்துவத்தை வலியுறுத்துவதிலும் திமுக பெரிதாக ஒன்றும் செய்யவில்லை என தெரிவித்துள்ளார்.
நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…
நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…
திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…
சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…
குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…