கோடநாடு கொலை,கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி,சசிகலாவை விசாரிக்க மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த கோடநாடு பங்களாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு,அதன் பாதுகாவலர் கொலை செய்யப்பட்டு ஆவணங்கள் கொள்ளை அடிக்கப்பட்டதாக சோலூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு,இது தொடர்பான வழக்கு நீலகிரி அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இதனையடுத்து,இது தொடர்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி,சசிகலா,இளவரசன்,சுதாகரன் ஆகியோரையும்,நீலகிரி முன்னாள் மாவட்ட ஆட்சியர் சங்கர்,முன்னாள் எஸ்பி முரளி,கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன்,அதிமுக நிர்வாகி சஞ்சீவன் ஆகியோரை விசாரிக்க வேண்டும் என்று இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 3 பேர் நீலகிரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.ஆனால்,கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனை மட்டும் விசாரிக்க நீலகிரி அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தது.
இந்நிலையில்,கோடநாடு கொலை,கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி,சசிகலாவை விசாரிக்க,இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தீபு,சதீசன்,சந்தோஷ் சாமி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுவில்,முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் தொடர்பு இருப்பதாக சயான் பேசியுள்ள நிலையில்,அதன் தீவிரத்தை பரிசீலிக்க நீலகிரி நீதிமன்றம் தவறிவிட்டது”,என்று தெரிவித்துள்ளனர்.
இந்த மனு மீதான விசாரணை அடுத்த வாரம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…