கோடநாடு எஸ்டேட்டில் கணினி ஆப்ரேட்டர் தினேஷ் குமார் மரணம் தொடர்பாக மீண்டும் விசாரிக்க தனிப்படை போலீசார் திட்டம்.
கோடநாடு எஸ்டேட்டில் கணினி ஆப்ரேட்டராக இருந்த தினேஷ்குமார் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் ஏற்கனவே கூறியிருந்த நிலையில், தற்போது கணினி ஆப்ரேட்டர் தினேஷ் குமார் மரணம் தொடர்பாக காவல்துறை மீண்டும் விசாரிக்க தனிப்படை போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.
கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக ஏடிஜிபி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 5 தனிப்படை அமைத்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. அதில், இந்த சம்பவம் தொடர்பாக ஜாமீனில் உள்ள குற்றவாளிகள் என கருதப்படும் அனைத்து பேரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கடந்த 2017ல் இறந்த தினேஷ்குமார் மரணம் குறித்து தனிப்படை போலீசார் மீண்டும் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். கோடநாடு சம்பவத்தை தொடர்ந்து கணினி ஆப்ரேட்டர் தினேஷ் குமார் தற்கொலை செய்ததாக முதலில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக நீதிமன்றத்தின் முன் அனுமதி பெற்று கோடநாடு எஸ்டேட் கணினி ஆப்ரேட்டர் தினேஷ் குமார் தற்கொலை தொடர்பாக மீண்டும் விசாரிக்க காவல்துறை திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…