மருத்துவ இடஒதுக்கீடு வழக்கு தீர்ப்பை ஜூலை 27-ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
மருத்துவ படிப்பு இடஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு போதிய இடங்கள் கிடைப்பது இல்லை எனவும் இடஒதுக்கீடும் முறையாக பின்பற்றப்படுவது இல்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இதையடுத்து, மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இடஒதுக்கீட்டிற்கு சென்னை உயர் நீதிமன்றத்தை அணுக கூறியது. இதனால், ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க கோரி தமிழக கட்சிகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
இந்நிலையில், மருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு கோரிய வழக்கில் அனைத்து தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் இந்த வழக்கை வருகின்ற ஜூலை 27-ஆம் தேதிக்கு தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…