#Breaking:எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.352 கோடி விடுவிப்பு-தமிழக அரசு அரசாணை!

Published by
Edison

2021- 22 ஆம் ஆண்டுக்கான எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் 50% மட்டும் விடுவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

2021-22 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த ரூ.705 கோடி (ரூபா எழுநூற்று ஐந்து கோடி மட்டுமே) நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில்,அதில் ரூ.352.5 கோடி (50% மட்டும்) விடுவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.அதன்படி,ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் தொகுதி மேம்பாட்டு நிதியாக ரூ.3 கோடியை தமிழக அரசு வழங்குகிறது.

இது தொடர்பாக அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:

“கடந்த 2019-2020 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தை (MLACDS) செயல்படுத்த விரிவான வழிகாட்டுதல்களுடன் ஆண்டுக்கு ஒரு தொகுதிக்கு ரூ.2.50 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து,திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களுடன் சட்டமன்ற உறுப்பினருக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ.2.50 கோடியிலிருந்து ரூ.3.00 கோடியாக உயர்த்தி ஆணைகள் வெளியிடப்பட்டன.

அதன்பின்னர்,2020-21 ஆம் ஆண்டில் எம்எல்ஏக்கான தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கீட்டை ரூ.2 கோடியாகக் குறைத்து,ரூ.235 கோடி (ரூ. 1 கோடி) ஒதுக்கீடு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனையடுத்து,ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் இயக்குனர் வரைவு வழிகாட்டுதல்களுடன் தேவையான முன்மொழிவை அனுப்பி, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தை நிதி 2021-22 ஆம் ஆண்டில் ஒரு தொகுதிக்கு ஆண்டுக்கு ரூ. 3 கோடி மற்றும் பட்ஜெட் மதிப்பீட்டின் ரூ.702 கோடியில் 50% நிதியை விடுவிக்க தேவையான அரசாணைகளை வெளியிடுமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில்,2021-22 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த ரூ.705 கோடி (ரூபா எழுநூற்று ஐந்து கோடி மட்டுமே) நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில்,அதில் ரூ.352.5 கோடி (50% மட்டும்) விடுவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது”,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Recent Posts

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…

1 hour ago

“நாங்க ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும்”…சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பேச்சு!

லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…

2 hours ago

அமெரிக்கா கிட்ட பேச்சுவார்த்தையா? வாய்ப்பே இல்லை மன்னிக்கவே மாட்டோம்! ஈரான் திட்டவட்டம்!

தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…

3 hours ago

“பாஜக எப்போதும் மக்கள் பிரச்சனைகளை கையில் எடுக்காது”- சீமான் சாடல்!

சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…

3 hours ago

விஜய் பிறந்த நாள் ஸ்பெஷல் : ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…

5 hours ago

தீவிரமடையும் போர் : இஸ்ரேல் விமான நிலையத்தை குறி வைத்து தாக்கிய ஈரான்!

தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…

5 hours ago