தமிழகத்தில் ஒன்று ஒரே நாளில் 508 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை 4,058 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இன்று ஒரே நாளில் 508 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நேற்று வரை 3,550 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 4,058 ஆக அதிகரித்துள்ளது. இதில், சென்னையில் இன்று மட்டும் 279 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அங்கு மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 2008 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் 2 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.
இதையடுத்து இன்று மட்டும் 76 பேர் கொரோனா வைரஸில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் பாதிக்கப்பட்ட 4,058 பேரில் 1,485 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பின்னர் இன்று ஒரே நாளில் 11,858 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 1,74,828 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அதில், 4,058 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தற்போது கொரோனா வார்டில் 2,537 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று சுகாதாரத்துறை அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் இன்று சென்னைக்கு அடுத்து கடலூரில் 68 பேருக்கு கொரோனா உறுதியானது. இதை தொடர்ந்து கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டில் தலா 38 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…