இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது.இதனால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. இன்றுடன் ஊரடங்கு நிறைவடைய இருந்தநிலையில் பிரதமர் மோடி இன்று காலை மக்களிடம் உரையாற்றும் போது ஊரடங்கு மேலும் 19 நாள்கள் நீட்டிக்கப்பட்டு மே 3-ம் தேதி வரை ஊரடங்கு இருக்கும் என தெரிவித்தார்.
இந்நிலையில் தமிழகத்தில் நாட்டுப்படகுகள், இயந்திரம் பொருத்திய நாட்டுப்படகுகள் தொடர்ந்து மீன்பிடிக்கலாம் என மீன்வளத்துறை தெரிவித்துள்ளது.
மேலும் படகு உரிமையாளர்கள் கொரோனா தடுக்க முக கவசம் போன்ற பாதுகாப்பு உபகரணத்தை தரவேண்டும் . மீன்பிடி துறைமுகம் , மீன்பிடி இறங்குதளம் ,கடற்கரை பகுதியில் மீன்களை பொது ஏலம் மூலம் விற்கக்கூடாது.
மீன் இறங்குதல் , சந்தைக்கு கொண்டு செல்லுதல் போன்ற பணிகளுக்கு குறைந்த ஆட்களை பயன்படுத்த வேண்டும். என்றும் ஆட்சியர் தலைமையிலான குழு எந்த நாளில் , எத்தனை படகுகளில் மீன்பிடிக்க செல்லலாம் என முடிவு செய்யும் என மீன்வளத்துறை தெரிவித்துள்ளது.
மேலும் தற்போதைய ஊரடங்கு காலம் மீன் பிடி தடைக் காலமாக கருதி விசைப்படகுகள் மீன்பிடிப்பில் ஈடுபட அனுமதியில்லை என்றும் தெரிவித்துள்ளது.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…