தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்களை உற்பத்தி செய்யும் ஆலைகள் பற்றி தகவல் அளித்தால் வெகுமதி தரப்படும்.
தடைசெய்யப்பட்ட நெகிழி பொருள்களை உற்பத்தி செய்யும் ஆலைகள் பற்றி தகவல் அளித்தால் வெகுமதி வழங்கப்படும் என தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. ஒரு முறை பயன்படுத்தி கைவிடப்படும் நெகிழிப் பொருள்கள் உற்பத்தி பயன்பாட்டுக்கு 2018 ஆம் ஆண்டு ஜூன் 25ம் தேதி முதல் தடை உள்ளது.
பிளாஸ்டிக்பை, பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டு, தர்மாகோல் கப்பு, பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. உணவுப் பொருள்கள் கட்ட பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் கொடிகள் போன்றவை தயாரிப்பதும், சேமிப்பதும், விற்பதும் தடைசெய்யப்பட்டுள்ளது
தடையை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றங்கள், பசுமை தீர்ப்பாயம் தொடர்ந்து அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது. அண்மையில் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு நெகிழி பொருள்களில் அடைப்பு காரணமாக கூறப்பட்ட நிலையில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் இந்த அறிவிப்பு அறிவித்துள்ளது. நெகிழிப் பொருள் உற்பத்தி பற்றி தெரிந்தால் https://tnpcb.gov.in/contact/php என்கிற இணையதளத்தில் பொதுமக்கள் தகவல் அளிக்கலாம்.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் ஆலைகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம் தகவல் தெரிவிப்பவர்களுக்கு பாராட்டும், உரிய வெகுமதியும் வழங்கப்படும் என மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…