#BREAKING: பொங்கல் சிறப்புப் பேருந்துகள் அறிவிப்பு..!

Published by
murugan

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் எந்தவிதமான சிரமும் இல்லாமல் தங்களது ஊருக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்நிலையில், கோயம்பேட்டில் இருந்து 4 பேருந்து நிலையங்களுக்கு செல்ல 24 மணி நேரமும் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

11 ,12 மற்றும் 13 ஆகிய நாட்களில் மொத்தம் 10 ஆயிரத்து 71 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதில் சென்னையில் இருந்து மட்டும் 4,078 பேருந்துகளும், மற்ற இடங்களில் இருந்து 5,993 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதில் 11-ம் தேதி அன்று சென்னையில் இருந்து 176 பேருந்துகளும், மற்ற இடங்களிலிருந்து 1297 பேருந்துகளும் இயக்கப்படயுள்ளது.

 12-ஆம் தேதி சென்னையில் இருந்து 1950 பேருந்துகளும், மற்ற இடங்களில் இருந்து 1,910 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. 13-ஆம் தேதி சென்னையிலிருந்து 1952 பேருந்துகளும், மற்ற இடங்களிலிருந்து 2786 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மொத்த முன்பதிவு மையங்கள் சென்னையில் 13 இடங்களில் உள்ளது. அதில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 10 மையங்களும், தாம்பரம் சானிடோரியத்தில் இரண்டு மையங்களும், பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்தில் ஒரு மையங்களும் உள்ளது.

மேலும் முன்பதிவு செய்துகொள்ள இணையதள வசதியான www.tnstc.in,tnstc official app, www.redbus.in,www.paytm.com,www.busindia.com போன்ற இணைய தளங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்துகொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் 1800 425 6151 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

Published by
murugan

Recent Posts

நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம்.., தமிழ்நாட்டில் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பா.?

நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம்.., தமிழ்நாட்டில் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பா.?

சென்னை : இன்று (ஜூலை 9, 2025) இந்தியா முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு…

14 minutes ago

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…

10 hours ago

“கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழ்நாட்டில் முகவரி இல்லாமல் போய்விட்டது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…

11 hours ago

”ராமதாஸ் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது” – அன்புமணி தலைமையில் தீர்மானம்.!

சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…

11 hours ago

பண மோசடி வழக்கு: பிரபல மலையாள நடிகர் செளபின் சாஹிர் கைது.!

கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…

12 hours ago

3வது டெஸ்ட் போட்டி: தீவிர பயிற்சி மேற்கொள்ளும் இந்திய அணி..!

லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…

12 hours ago