சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் மாநில வளர்ச்சி கொள்கைக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
கடந்த ஜூன் 6-ம் தேதி இந்த மாநில வளர்ச்சி கொள்கையின் குழு மாற்றியமைக்கப்பட்டு அதற்கான துணை தலைவர் மற்றும் உறுப்பினர்கள் குறித்த தகவல்களை வெளியிடப்பட்டது. இந்த குழுவின் துணை தலைவராக பொருளாதார வல்லுனராக இருக்ககூடிய ஜெய ரஞ்சன் அவர்கள் நியமிக்கப்பட்டார். மேலும், தமிழகத்தின் முக்கிய பிரமுகர்கள் இந்த குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதனை தொடர்ந்து இந்த குழுவின் இரண்டு கூட்டங்கள் துணை தலைவர் ஜெயரஞ்சன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இந்த குழுவின் தலைவராக இருப்பவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான். இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநில வளர்ச்சி கொள்கைக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த குழுவின் துணை தலைவர் ஜெயரஞ்சன் மற்றும் குழுவின் உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
ஏற்கனவே, 13 பேர் கொண்ட இந்த குழுவின் உறுப்பினர்களுக்கு எந்தெந்த துறைகள் என்பது ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள துறை சார்ந்த பணிகளை ஒருங்கிணைத்து, பல்வேறு தரப்பினரிடம் பெற்ற கருத்துகளின் அடிப்படையில் தயாரான வரைவு திட்டம் குறித்து ஆலோசனை நடைபெறுகிறது. இதனையடுத்து, முதல்வர் எடுக்கக்கூடிய முடிவுகளை பொறுத்து, மாநில வளர்ச்சி கொள்கைக்குழு தங்களது பணிகளை தொடங்கி, பல்வேறு விஷயங்களை மேற்கொள்ளும் என கூறப்பப்டுகிறது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…