#BREAKING : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநில வளர்ச்சி கொள்கைக்குழு ஆலோசனை…!

Published by
லீனா

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் மாநில வளர்ச்சி கொள்கைக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

கடந்த ஜூன் 6-ம் தேதி இந்த மாநில வளர்ச்சி கொள்கையின் குழு மாற்றியமைக்கப்பட்டு அதற்கான துணை தலைவர் மற்றும் உறுப்பினர்கள் குறித்த தகவல்களை  வெளியிடப்பட்டது. இந்த குழுவின் துணை தலைவராக பொருளாதார வல்லுனராக இருக்ககூடிய ஜெய ரஞ்சன் அவர்கள் நியமிக்கப்பட்டார். மேலும், தமிழகத்தின் முக்கிய பிரமுகர்கள் இந்த குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதனை தொடர்ந்து இந்த குழுவின் இரண்டு கூட்டங்கள் துணை தலைவர் ஜெயரஞ்சன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இந்த குழுவின் தலைவராக இருப்பவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான். இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநில வளர்ச்சி கொள்கைக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த குழுவின் துணை தலைவர் ஜெயரஞ்சன் மற்றும் குழுவின் உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

ஏற்கனவே, 13 பேர் கொண்ட இந்த குழுவின் உறுப்பினர்களுக்கு எந்தெந்த துறைகள் என்பது ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள துறை சார்ந்த பணிகளை ஒருங்கிணைத்து, பல்வேறு தரப்பினரிடம் பெற்ற கருத்துகளின் அடிப்படையில் தயாரான வரைவு திட்டம் குறித்து ஆலோசனை நடைபெறுகிறது. இதனையடுத்து, முதல்வர் எடுக்கக்கூடிய முடிவுகளை பொறுத்து, மாநில வளர்ச்சி கொள்கைக்குழு தங்களது பணிகளை  தொடங்கி, பல்வேறு விஷயங்களை மேற்கொள்ளும் என கூறப்பப்டுகிறது.

Published by
லீனா

Recent Posts

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

6 hours ago

இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!

பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…

6 hours ago

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

7 hours ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

8 hours ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

9 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

9 hours ago