#BREAKING: யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம் என்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு.!

Published by
செந்தில்குமார்

கோவிலின் ஆகம விதி முறைகள் படித்திருந்தால் யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம் என்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது. சேலம் சுகவனேஸ்வரர் கோவிலுக்கு புதிய அர்ச்சகக்கற்களை நியமிக்கும் பொருட்டு அறநிலையத்துறை சார்பில் கடந்த 2018ஆம் ஆண்டு காலிப்பணியிட அறிவிப்பு வெளியானது. அதில் யார்வேண்டுமென்றாலும் ஆகம விதிகள் படித்து இருந்தால் போதுமென குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரமணிய குருக்கள் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். குறிப்பிட்ட கோவில்களின் ஆகம விதிகள் தெரிந்திருந்தால் போதும் என அறநிலையத்துறை விளக்கம் கொடுத்து இருந்தது. இதன் அடிப்படையில், அந்தந்த கோவில்களில் பின்பற்றப்படும் ஆகம விதிகளை தெரிந்து அதில் தேர்ச்சி பெற்று இருந்தாலே போதுமானது.

ஆகமத்தை பின்பற்றாத கோவில்களில் ஆகமத்தை படிக்காதவர்களும் அர்ச்சகர்கள் ஆகலாம். அந்த கோயில் ஆகம விதிகளுக்குட்பட்டதா இல்லையா என்பதை பொறுத்து முடிவுசெய்யவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு வழக்குத் தொடரப்பட்டது.

அந்த மேல் முறையீட்டு வழக்கில், தலைமை நீதிபதி கங்காபூர்வாலா, ஆதிகேசவராவ் அமர்வு விசாரித்த நிலையில், குருக்கள் தரப்பில் பரம்பரையாக வழிவருபவர்கள் மட்டுமே அர்ச்சகர் ஆகலாம் என்றும், தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை பிறப்பிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் தமிழக அரசு சார்பிலும், ஆகம விதிகளை பின்பற்றும் மற்றும் பின்பற்றாத கோயில்கள் எவை என்பதை குழு நியமிக்கப்பட்டு கண்டறிந்து வருகிறது.

எனவே, அதுவரை தடை பிறப்பிக்க கூடாது எ வாதம் வைக்கப்பட்ட நிலையில், தமிழக அரசும் அறநிலையத்துறையும் இந்த வழக்கில் விளக்கம் அளிக்க கோரி, நீதிபதிகள் வழக்கை செப்டம்பர் 22ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இதற்கிடையில் குருக்கள் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல் முறையீட்டை விசாரித்த நீதிபதிகள் இந்த மனுவை தள்ளுபடி செய்துள்ளனர்.

அதன்படி, கோவிலின் ஆகம விதிகள் படித்து இருந்தால் போதும் ஆகம விதி முறைகள் யார்வேண்டுமென்றாலும் அர்ச்சகர் ஆகலாம் என்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

ராமதாஸுக்கு போட்டியாக நாளை நிர்வாகக் குழு கூட்டத்தை நடத்தும் அன்புமணி!

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

39 minutes ago

கூட்டத்தை பார்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜுரம் வரலாம் – எடப்பாடி பழனிசாமி சாடல்!

கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…

2 hours ago

லக்கி பாஸ்கர் 2 நிச்சயம் வரும்… உறுதி கொடுத்த இயக்குநர் வெங்கி அட்லூரி!

ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…

2 hours ago

முருகன் கோயில் குடமுழுக்கு..”என்னை அனுமதிக்கவில்லை”… செல்வப்பெருந்தகை வேதனை!

காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…

3 hours ago

பூனையை பார்த்துக்கோங்க என்னோட சொத்து உங்களுக்கு…ஆஃபர் கொடுத்த சீனா தாத்தா!

குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…

3 hours ago

அங்கன்வாடி மையங்கள் மூடலா? விளக்கம் கொடுத்த அமைச்சர் கீதா ஜீவன்!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியாகி அந்த செய்தி தீயை போல மிகவும்…

4 hours ago