#BREAKING : உண்மையில் இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாள் : குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

Published by
லீனா

இந்திய வரலாற்றின் முக்கியத்துவம் வாய்ந்த தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களின் படத்தை திறந்ததில் மகிழ்கிறேன்.

இன்று தமிழக சட்டமன்றம் தொடங்கி 100-வது ஆண்டை எட்டியுள்ள நிலையில், நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் பல கட்சி தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில், சட்டமன்ற தலைவர் சபாநாயகர் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், குடியரசு தலைவருக்கு பொன்னாடை போர்த்தி, நினைவு பரிசுகளை வழங்கினார். இதனையடுத்து, தமிழக சட்டமன்றத்தில் 15 தலைவர்களின் உருவப்படம் திறக்கப்பட்டுள்ள நிலையில், 16-வது தலைவராக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உருவ படத்தை  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் திறந்து  வைத்துள்ளார்.

அதன்பின் உரையாற்றிய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், இந்திய வரலாற்றின் முக்கியத்துவம் வாய்ந்த தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களின் படத்தை திறந்ததில் மகிழ்கிறேன். உண்மையில் இது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாள் என தமிழில் உரையாற்றினார்.

மேலும், புரட்சிகரமான எண்ணங்களால் சமூக சீர்திருத்தங்களுக்கு வித்திட்டவர் கருணாநிதி. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுக்கொடுத்தவர் கலைஞர். தமிழ் இலக்கியத்திற்கும், தமிழ் சினிமாவிற்கும் பெரும் பங்காற்றியவர். மந்திரம் கற்போம்; வினைத் தந்திரம் கற்போம்; வானை அளப்போம் கடல் மீனை யளப்போம் என்ற மகாகவி பாரதியாரின் பாடல் வரிகளை மேற்கோள் காட்டி உரையாற்றினார். மேலும், நம் நாடு இந்த வருடம் பல துறைகளில் சாதனை படைத்துள்ளது என தெரிவித்தார்.

Published by
லீனா

Recent Posts

இந்திய எல்லைக்குள் சீன ஏவுகணை! பாகிஸ்தான் தாக்குதலா?

இந்திய எல்லைக்குள் சீன ஏவுகணை! பாகிஸ்தான் தாக்குதலா?

பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…

23 minutes ago

பாகிஸ்தானில் அடுத்தடுத்து 2 வெடிகுண்டு தாக்குதல்கள்! 14 வீரர்கள் பலி!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…

1 hour ago

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…

3 hours ago

+2 ரில்சட் வெளியானது! எங்கு எப்படி பார்க்கலாம்? வழிமுறைகள் இதோ…

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…

4 hours ago

களைகட்டிய மதுரை! திருக்கல்யாண வைபவம்., முக்கிய தகவல்கள் இதோ…

மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…

4 hours ago

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…

5 hours ago