தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே அரிவாளால் வெட்டப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே, முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் (வயது 55) அரசு ஊழியரை மர்ம நபர்கள் கிராம நிர்வாக அலுவலகத்திற்குள் புகுந்து வெட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அலுவலகத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள் விஏஓ லூர்து பிரான்சிஸை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.
இதில், படுகாயம் அடைந்த விஏஓ பிரான்சிஸ் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், கிராம நிர்வாக அலுவலகத்திற்குள் புகுந்து மர்ம நபர்கள் வெட்டியதில் படுகாயமடைந்த லூர்து பிரான்சிஸ் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விஏஓவை அரிவாளால் வெட்டியதில் கலியாவூரை சேர்ந்த ராமசுப்பிரமணியன் கைதான நிலையில், மற்றவர்களை காவல்துறை வலைவீசி தேடி வருகிறது.
ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர், 334 பந்துகளில் 367* ரன்கள் குவித்து,…
மதுரை : மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி (NTK) ஏற்பாடு செய்த “ஆடு-மாடுகளின் மாநாட்டில்” கட்சித் தலைவர் செந்தமிழன் சீமான்,…
வாஷிங்டன் : எலான் மஸ்க்கின் xAI நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட Grok என்ற செயற்கை நுண்ணறிவு (AI) சாட்பாட், X தளத்தில்…
லண்டன் : இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது விறு விறுப்பாக…
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் பேசுகையில் " எடப்பாடி பழனிசாமி ‘தமிழகத்தை மீட்போம்’ என்று ஒரு பயணத்தைத்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் தனக்கு படுகொலை மிரட்டல் விடுத்ததை உறுதிப்படுத்தி, அதைப்…