#Breaking:நடிகர் சங்க தலைவர் யார்? – வாக்கு எண்ணிக்கை தொடக்கம்!

Published by
Edison

கடந்த 2015 ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு நடந்த தேர்தலில் விஷால் தலைமையிலான அணி வெற்றி பெற்றது.இந்த அணி நிர்வாகிகளின் பதவிக்காலம் 2018 ஆம் ஆண்டு அக்டோபரில் முடிவடைந்த நிலையில்,செயற்குழு ஒப்புதலுடன் பதவிக்காலம் 6 மாதம் நீட்டிக்கப்பட்டது.

இரு அணிகள் மோதல்:

இதனையடுத்து,கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் 23-ஆம் தேதி நடந்த நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றது.அதன்படி,தலைவர்,இரு துணைத் தலைவர்கள், பொதுச்செயலாளர்,பொருளாளர்,செயற்குழு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது.இத்தேர்தலில் கே.பாக்யராஜ் தலைமையிலான அணியும்,நாசர் தலைமையிலான அணியும் போட்டியிட்டன.மொத்தம் பதிவான 2500 வாக்குகளில் சுமார் 1150 வாக்குகள் தபால் மூலம் பதிவு செய்யப்பட்டன.

தேர்தல் செல்லாது:

இதனிடையே,பதவிக்காலம் முடிந்த செயற்குழு மூலம்,ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனை தேர்தல் அதிகாரியாக நியமித்து தேர்தலை அறிவித்துள்ளது சட்ட விரோதமானது மற்றும் நடிகர் சங்க உறுப்பினர்கள் பலர் நீக்கப்பட்டுள்ளதால்,முறையான வாக்காளர் பட்டியலை தயாரித்து நியாயமாக தேர்தல் நடத்த குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் எதிர்தரப்பினர் வழக்கு தொடர்ந்தனர்.

மேலும்,61 உறுப்பினர்கள் வாக்காளர் பட்டியிலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து அளித்த புகாரின் அடிப்படையில்,தேர்தல் செல்லாது என நீதிமன்றம் உத்தரவிட்டது.இதனால்,வாக்குப்பெட்டிகள் ஒரு தனியார் வங்கியில் இரண்டரை ஆண்டுகள் வைக்கப்பட்டது.

உயர்நீதிமன்றம் உத்தரவு:

அதன் பின்னர்,தேர்தல் செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து நாசர்,விஷால் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.இதனை விசாரித்த உயர் நீதிமன்றம்,தேர்தல் செல்லும் என்றும், ஓட்டுகளை எண்ணவும் உத்தரவிட்டது.

வாக்கு எண்ணிக்கை:

இந்நிலையில்,தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் தற்போது  தொடங்கியுள்ளன.நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகள் ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் அவர்கள் முன்னிலையில் எண்ணப்படுகின்றன.

முன்னதாக நடைபெற்ற இத்தேர்தலில் தலைவர் பதவிக்கு நாசர்,பொதுச்செயலாளர் பதவிக்கு விஷால்,பொருளாளர் பதவிக்கு கார்த்தி போட்டியிட்டனர்.மறுபுறம் தலைவர் பதவிக்கு பாக்கியராஜ்,பொதுச்செயலாளர் பதவிக்கு ஜாரி கணேஷ்,பொருளாளர் பதவிக்கு பிரசாந்த் ஆகியோர் போட்டியிட்டனர்.இந்த நிலையில்,வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் எந்த அணி வெற்றி பெறும்? தலைவர் யார்? என்பது தெரிய வரும்.

 

Recent Posts

சாத்தான்குளம் கிணற்றுக்குள் மூழ்கிய வேன் மீட்பு – 5 பேர் பலி.! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு.!

சாத்தான்குளம் கிணற்றுக்குள் மூழ்கிய வேன் மீட்பு – 5 பேர் பலி.! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு.!

தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…

4 hours ago

RCB vs KKR : ரசிகர்ளுக்கு ஷாக்!! மழையால் கைவிடப்பட்ட போட்டி.., வெளியேறியது நடப்பு சாம்பியன்.!

பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…

4 hours ago

சென்னை சாலையில் திடீர் பள்ளம்.., உள்ளே சிக்கிய கார்.! மெட்ரோ நிர்வாகம் விளக்கம்!

சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…

7 hours ago

பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்த ஹரியானா பெண் யூடியூபர் கைது.!

ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…

7 hours ago

RCB vs KKR: வெளுத்து வாங்கும் மழையால் டாஸ் போடுவதில் தாமதம்.!

பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…

8 hours ago

சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் பரவும் கொரோனா.., சுகாதாரத்துறை எச்சரிக்கை.!

சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…

9 hours ago