சென்னை:ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளில் லஞ்சம்,ஊழல் நடந்ததால் தி.நகருக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நான்காவது நாளாக இன்று முதல்வர் ஆய்வு செய்து வருகிறார்.அந்த வகையில், சென்னை,எழிலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்திற்கு முதல்வர்நேரில் சென்று அதன் செயல்பாடுகளை பார்வையிட்டு, மக்கள் தெரிவிக்கும் கோரிக்கைகளை கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி வாயிலாக நேரடியாக கேட்டறிந்தார்.
இதனையடுத்து,தியாகராய நகர், விஜயராகவா சாலையில் உள்ள கால்வாயில் பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு கழிவுகளை அகற்றும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிலையில்,ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளில் லஞ்சம்,ஊழல் நடந்ததால் தி.நகருக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். மேலும்,இது தொடர்பாக செய்தியாளரிட அவர் கூறியதாவது:
“ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளில் லஞ்சம்,ஊழல் நடந்ததால் தி.நகருக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.அரைகுறையாக நடந்த பணிகளால்தான் இந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.குறிப்பாக,10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் எதுவும் செய்யாததால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது”,என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து,பேசிய முதல்வர்,”எந்த நோக்கத்துடனும், லட்சியத்துடனும் ஆட்சிக்கு வந்தோமோ,அதன் அடிப்படையில் மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிக்கு முதலில் முக்கியத்துவம் அளிக்கப் படுகிறது.நான் மேயராக இருந்தபோதும்,துணை முதல்வராக இருந்தபோதும் நிவாரணப்பணிகளை மேற்கொண்டது போன்று தற்போது முதல்வராக நிவாரணப்பணிகளை செய்து வருகிறேன்.
சென்னையில்,மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை மின்மோட்டார் மூலம் வெளியேற்றும் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடக்கின்றன.அதே சமயம்,மழைக்கால நோய்களை தடுக்க ஆங்காங்கே மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன.
மேலும்,இரண்டு நாட்கள் மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.எனவே,அவை முடிந்த பிறகே மத்திய அரசிடம் நிவாரணம் கேட்பது பற்றி முடிவு எடுக்கப்படும்”,என்று தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் : ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஈரானின் அரசு…
சென்னை : சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தின் மீது, இன்று அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தாக்குதல்…
புதுச்சேரி : குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் 3 நாள் பயணமாக நேற்றைய தினம் புதுச்சேரி சென்றார். இன்று…
பெங்களூர் : இந்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கை நடத்தும் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைக்கான அட்டவணையை ஐ.சி.சி அறிவித்துள்ளது.…
மதுரை : தமிழ்நாடு பிரீமியர் லீக்தொடரில் சீனியர் வீரரான அஸ்வின் நிதானமிழந்து செய்த காரியங்களுக்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். இந்த…
ஈரான் : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க இந்தியா திட்டமிட்டுள்ளது.…