தனியார் மருத்துவமனைகள் வசூலிக்கும் கட்டணத்தை மத்திய, மாநில அரசே ஏற்குமா..? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை பெற்றாலும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை கட்டணம் அதிகமாக வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து சமீபத்தில், தமிழக அரசு தனியார் மருத்துவமனைகளில் வசூலிக்க வேண்டிய கட்டண தொகை குறித்து வெளியிட்டது.
இந்த கட்டணங்கள் அதிகமாக இருப்பதாக பல தரப்பினர் தெரிவித்தனர். இந்நிலையில் இது குறித்த வழக்கு ஒன்று இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் வசூலிக்கும் கட்டணத்தை மத்திய, மாநில அரசே ஏற்குமா..? அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக புகார் அளிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளனவா..? என கேள்வி எழுப்பி உள்ளது.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதிகள் குறித்து தெரிவிக்கவும், ஜூன் 16-ம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது.
சென்னை : தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) தலைவர் விஜய பிரபாகரன், 2025 ஜூன் 29 அன்று சென்னை…
தெஹ்ரான்: ஈரானின் மூத்த மதகுரு கிராண்ட் ஆயத்துல்லா நாசர் மகாரெம் ஷிராஸி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி…
சேலம் :பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தொடர்ந்து…
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…