#BREAKING : இப்போது உள்ள விலைவாசிக்கு இந்த உதவி தொகை போதுமானதாக இருக்குமா..? இவர்களை அவமானப்படுத்தாதீர்கள்…!

Published by
லீனா

சொற்ப அளவிலான உதவித்தொகை வழங்கி மாற்றுத் திறனாளிகளை அவமானப்படுத்த வேண்டாம் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

மாற்றுதிறனாளிகளுக்கு ஒவ்வொரு மாதமும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவி தொகை வழங்குவதில் பார்வை மாற்று திறனாளிகளுக்கு பாரபட்சம் காட்டப்படுவதாகவும், பிற மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படுவது போல ஒரே மாதிரியான தொகை வழங்கப்பட வேண்டும் என்றும், அன்றாட செலவுகளை எதிர்கொள்ளும் வகையில் ஒரு நியாயமான தொகையை வழங்க வேண்டும் என்றும், கடந்த 2018- ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை கடந்த 2019-ஆம் ஆண்டு விசாரித்த நீதிபதிகள், மாறுதிறனாளிகளிடையே பாரபட்சம் காட்ட கூடாது என்றும், அவர்களது செலவுகளை சந்திக்கக்கூடிய அளவில் ஒரு தொகையை வழங்க வேண்டும் என்றும் உத்தரவைத்தனர். அதன்படி, மாதம் ரூ.1,000 வழங்குவதாக தமிழக அரசு முடிவு செய்து வழங்கி வருகிறது.

இதனை உயர்த்தி வழங்க வேண்டும் என்று நேற்றோதையா அமைப்பு கூடுதல் மனுதாக்கல்  செய்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், தமிழக அரசு தரப்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, ரூ.1,000-லிருந்து, ரூ.1,500-ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி அமர்வு, சொற்ப அளவிலான உதவித்தொகை வழங்கி மாற்றுத் திறனாளிகளை அவமானப்படுத்த வேண்டாம். தற்போதைய விலைவாசிக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1000, ரூ.1500 எப்படி போதுமானதாக இருக்கும்? அதைவிட அந்த தொகையையும் நிறுத்திவிடலாம் என்றும் தெரிவித்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் சமூக நலத்துறை மீது நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.  மேலும், உதவி தொகை உயர்த்தி வழங்காதது குறித்து சமூக நலத்துறை முதன்மை செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

Recent Posts

தூத்துக்குடி விமான நிலைய புதிய முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி…என்னென்ன சிறப்பம்சங்கள்?

தூத்துக்குடி விமான நிலைய புதிய முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி…என்னென்ன சிறப்பம்சங்கள்?

தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, ஜூலை 26, 2025 அன்று மாலை 7:50 மணிக்கு…

48 minutes ago

தமிழகம் வந்தடைந்த பிரதமர் மோடி…தூத்துக்குடியில் உற்சாக வரவேற்பு!

தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூலை 26 இன்று அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி…

1 hour ago

அஜித்துடன் ஆக்சன் படம் செய்வேன் …உறுதி கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ்!

சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…

2 hours ago

INDvsENG : இங்கிலாந்து அணியின் அபார பேட்டிங்.. தடுமாறும் இந்தியா!

மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…

2 hours ago

பிரதமர் மோடி தமிழகம் வருகை…பாஜக, அதிமுக கொடியுடன் விசிக கொடி!

அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…

3 hours ago

INDvsENG : சச்சினின் சாதனையை முறியடிப்பாரா ஜோ ரூட்?

மான்செஸ்டர் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஜோ ரூட், இந்தியாவுக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட்…

4 hours ago