திருப்பதி செல்லும் பேருந்துகள் வேலூர் வரை மட்டுமே இயக்கப்படும்!

Published by
Rebekal

கொரோனா இரண்டாம் அலை காரணமாக திருப்பதிக்கு செல்லக்கூடிய பேருந்துகள் வேலூர் வரை மட்டுமே இயக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஒரு வருட காலமாக கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏற்கனவே தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருந்தாலும், பொதுமக்களின் நிலை கருதி சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் பேருந்துகள் இயக்கம் குறித்து தற்பொழுது தமிழக விரைவு போக்குவரத்து கழக இயக்குனர் கு.இளங்கோவன் அவர்கள் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் அரசு விதித்துள்ள இரவு நேர ஊரடங்கை கருத்தில் கொண்டு பொதுமக்களுக்கு வசதியாக அதிகாலை 4 மணி முதல் இரவு 8 மணிக்குள்ளாக பேருந்துகள் இயக்கப்படுகிறது எனவும், அரசு விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு  அறிவிக்கப்பட்டுள்ளதால், அன்று பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பெங்களூர் செல்லும் பேருந்துகள் ஓசூர் வரையும் திருப்பதிக்கு செல்லக்கூடிய பேருந்துகள் வேலூர் வரையும் மட்டுமே இயக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

“தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தால்” இதான் நடக்கும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

“தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தால்” இதான் நடக்கும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : மதுரையில் இன்று 48 ஆண்டுகளுக்கு பிறகு திமுக பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவரும்,…

16 minutes ago

ஆதவ் அர்ஜுனா விவகாரம்: ”விஜய் என்னுடன் தொலைபேசியில் பேசவில்லை” – எடப்பாடி பழனிசாமி.!

சென்னை : அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமியை ஆதவ் அர்ஜுனா ஒருமையில் பேசிய வீடியோ வைரலானது. இதற்கு சீமான் உள்ளிட்டோர் கண்டனம்…

1 hour ago

அஞ்சலை அம்மாள் பிறந்தநாள் – தவெக தலைவர் விஜய் மரியாதை!

சென்னை : அஞ்சலை அம்மாள், இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முக்கியமான வீராங்கனையாகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும், அரசியல்வாதியாகவும் திகழ்ந்தவர். தமிழக…

2 hours ago

”எந்த கோமாளி கூட்டத்தாலும் திமுகவை வெல்ல முடியாது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை.!

மதுரை : மரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு தொடங்கி நடைபெற்று வருகிறது. பொதுக்குழுவில் அமைச்சர்கள், திமுக எம்.பி.க்கள்…

4 hours ago

டெல்லியில் தமிழர்கள் வசித்த மதராஸி முகாம் இடிப்பு.., தமிழ்நாடு அரசு உதவி அறிவிப்பு.!

சென்னை : டெல்லியில் 4 தலைமுறைகளாக தமிழர்கள் வசித்து வந்த மதராஸி முகாம் இடிக்கப்பட்டு வருகிறது. நீண்ட காலமாக தமிழர்கள்…

4 hours ago

பழனிசாமி, அண்ணாமலை குறித்த பேச்சு: “அரசியல் வாழ்வில் இது எனக்கு ஒரு பாடம்” – வருத்தம் தெரிவித்தார் ஆதவ் அர்ஜூனா.!

சென்னை : நேற்றைய தினம் கூட்டணி விவகாரத்தில், எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலையை தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர்…

4 hours ago