ஒன்றிய அரசு என்று கூற தடை விதிக்க முடியாது- மதுரை கிளை அதிரடி..!

Published by
murugan

மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைப்பதற்கு  தடைவிதிக்க உத்தரவிட கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

உயர்நீதிமன்ற மதுரை கிளையில் திண்டுக்கல்லை சார்ந்த ராமசாமி என்பவர் பொதுநல வழக்கை தாக்கல் செய்து இருந்தார். அதில், சமீபத்தில் தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக பெருபான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. திமுக ஆட்சி அமைத்த பின்னர், தமிழக முதல்வர் மற்றும் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறி வருகிறார்கள்.

இந்திய அரசை இந்தியா அரசு அல்லது பாரத் அரசு என்று தான் கூறவேண்டும். இவர்கள் கூறுவது போல ஒன்றிய அரசு என்று குறிப்பிடுவது இந்திய இறையாண்மைக்கு எதிரானது, இதனால் மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைப்பதற்கு தடைவிதிக்க வேண்டும். மேலும் இந்த வழக்கு முடியும் வரை இந்தியா அரசு அல்லது பாரத் அரசு என்று தான் குறிப்பிட உத்தரவிட வேண்டும் என தெரிவித்து இருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அடங்கிய அமர்வு, தமிழக முதலமைச்சரோ, அமைச்சர்களே இப்படி தான் பேசவேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது. மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைப்பதற்கு  தடைவிதிக்க உத்தரவிட முடியாது.  அது முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் தனிப்பட்ட உரிமை என நீதிபதிகள் தெரிவித்தனர்.

Published by
murugan
Tags: maduraihc

Recent Posts

அவசரகால முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அனைத்து மாநிலங்களுக்கும் உள்துறை அமைச்சகம் கடிதம்.!

அவசரகால முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அனைத்து மாநிலங்களுக்கும் உள்துறை அமைச்சகம் கடிதம்.!

டெல்லி : பாகிஸ்தானுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்காக சிவில் பாதுகாப்பு விதிகளின்…

38 seconds ago

சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.!

சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…

1 hour ago

பலத்தை அதிகரிக்க ராணுவ தளபதிக்கு `அதி உச்சமான’ கூடுதல் அதிகாரம் அளித்த மத்திய அரசு.!

டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…

2 hours ago

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஒரு வார காலத்திற்கு தள்ளிவைப்பு – IPL நிர்வாகம் அறிவிப்பு.!

டெல்லி : ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடனான போர் பதற்றம்…

2 hours ago

ராயல் சல்யூட் : பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் முரளி நாயக் வீரமரணம்.!

ஆந்திரப் பிரதேசம் : பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா நுழைந்து பயங்கரவாத முகாம்களைத் தாக்கியதை அடுத்து, கோபமடைந்த பாகிஸ்தான், எல்லையைத் தாண்டி…

3 hours ago

போர் பதற்றம்., நேரடி தகவல்கள் வேண்டவே வேண்டாம்! பாதுகாப்பு அமைச்சகம் அறிவுறுத்தல்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளை…

4 hours ago