ராயல் சல்யூட் : பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் முரளி நாயக் வீரமரணம்.!
பாகிஸ்தானின் துப்பாக்கிச்சூட்டில் ஆந்திராவின் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய ராணுவ வீரர் முரளி நாயக் வீரமரணம் அடைந்துள்ளார்.

ஆந்திரப் பிரதேசம் : பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா நுழைந்து பயங்கரவாத முகாம்களைத் தாக்கியதை அடுத்து, கோபமடைந்த பாகிஸ்தான், எல்லையைத் தாண்டி துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கியுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு இந்திய ராணுவமும் தகுந்த பதிலடி கொடுத்துள்ளது, இப்படி எல்லையில் பதற்றம் அதிகரித்து வருகிறது, மோதல்கள் இன்னும் தொடர்கின்றன.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே நடந்த இந்தியா – பாகிஸ்தான் இடையேயான மோதலில், ஆந்திராவைச் சேர்ந்த ராணுவ வீரர் முரளி நாயக் வீர மரணம் அடைந்துள்ளார். இதையடுத்து, நாட்டிற்காக தனது இன்னுயிரை நீத்த முரளி நாயக்கின் மரணத்துக்கு ஆந்திரப் பிரதேசம் மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்திற்கும் சந்திரபாபு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
ஆந்திரப் பிரதேசத்தின் சத்ய சாய் மாவட்டத்தின் கோரண்ட்லா மண்டலத்தில் உள்ள தொலைதூர கல்லிதண்டாவைச் சேர்ந்த முரளி நாயக், இந்திய ராணுவத்தில் பணியாற்றுகிறார். மிகுந்த முயற்சியுடன் ராணுவத்தில் சேர்ந்த அவர், தேசப் பாதுகாப்பில் எப்போதும் முன்னணியில் இருந்தார்.
அவரது துணிச்சலைப் பாராட்டி, ராணுவ உயர் அதிகாரிகள் அவருக்கு முக்கியமான ஜம்மு காஷ்மீரில் ஒரு பணி நியமனம் வழங்கினர். அங்கு தனது கடமைகளைச் செய்யும்போது பாகிஸ்தான் கும்பல்களை துணிச்சலுடன் எதிர்கொண்டபோது முரளி நாயக்கிற்கு துப்பாக்கிச் சூட்டுக் காயம் ஏற்பட்டது. அவர் பலத்த காயமடைந்து போர்க்களத்தில் வீர மரணம் அடைந்தார்.
முரளி நாயக்கின் மரணம் குறித்து குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முரளியின் உடல் நாளை சனிக்கிழமை (மே 10) அவரது சொந்த ஊரான கல்லிதண்டாவை அடையும். அவரது இறுதிச் சடங்கில் அரசியல்வாதிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025