ஆளுநர் நியமனத்திற்கு தகுதி வாய்ந்த ஒரு பெண் கூட கிடைக்கவில்லையா? என ஆளுநர் நியமனம் குறித்து குஷ்பூ கேள்வி எழுப்பியுள்ளார்.
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள், கர்நாடகா உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்த நிலையில், கர்நாடக மாநில புதிய ஆளுநராக தாவர்சந்த் கெலாட், மத்திய பிரதேச ஆளுநராக மங்குபாய் ஜாகன்பாய் படேல், மிசோரம் ஹரிபாபு, ஹிமாச்சல் ராஜேந்திரன் விஸ்வநாதன், கோவா ஆளுநராக ஸ்ரீதரன் பிள்ளை, திரிபுரா ஆளுநராக சத்ய தேவ் நாராயன் ஆர்யா, ஜார்கண்ட் ரமேஷ் பயஸ், ஹரியானா ஆளுநராக பண்டாரு தத்தாத் ரேயா ஆகியோர் நியாயம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த 8 ஆளுநர்களுமே ஆண்கள் தான். ஒரு பெண் ஆளுநர் கூட இடம் பெறவில்லை. இது தொடர்பாக நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பூ அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘குடியரசு தலைவர் அறிவித்த புதிய ஆளுநர் பட்டியலை பகிர்ந்து கொண்ட நிலையில், ஆளுநர் நியமனத்திற்கு தகுதி வாய்ந்த ஒரு பெண் கூட கிடைக்கவில்லையா? என்றும், ஏன் இந்த பாகுபாடு, குடியரசு தலைவரிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை.’ என்றும் பதிவிட்டுள்ளார்.
அகமதாபாத் : மழை காரணமாக மும்பை பஞ்சாப் இடையேயான ஐபிஎல் குவாலிஃபயர் 2 போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த…
சென்னை : கமல் - சிம்பு உள்ளிட்டோர் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படத்தில் இடம்பெற்ற 'முத்த மழை' பாடல் யூடியூப்…
அகமதாபாத் : ஐபிஎல் குவாலிஃபயர் 2 சுற்றில் இன்று பஞ்சாப், மும்பை அணிகள் மோதுகின்றன. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
புதுச்சேரி : விசிக பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமாரின் மூத்த சகோதரர் கோ.க.நடேசன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் புதுச்சேரி…
சென்னை : மதுரையில் இன்று 48 ஆண்டுகளுக்கு பிறகு திமுக பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவரும்,…
சென்னை : அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமியை ஆதவ் அர்ஜுனா ஒருமையில் பேசிய வீடியோ வைரலானது. இதற்கு சீமான் உள்ளிட்டோர் கண்டனம்…