தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு – அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மனு தள்ளுபடி!

Published by
பாலா கலியமூர்த்தி

பணப்பட்டுவாடா செய்து ஊழல் நடைமுறைகளில் விஜயபாஸ்கர் வெற்றி பெற்றதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு.

தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரிய அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.  புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. அதாவது தேர்தலில் பணப்பட்டுவாடா செய்து ஊழல் நடைமுறைகளில் விஜயபாஸ்கர் வெற்றி பெற்றதாக வழக்கு தொடுக்கப்பட்டது.

திமுக வேட்பாளர் எம்.பழனியப்பன் தொடர்ந்த தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி விஜயபாஸ்கர் மனு அளித்திருந்தார். வழக்கை ஆரம்ப கட்டத்திலேயே தள்ளுபடி செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில், 2021 தேர்தலில் தனது வெற்றிக்கு எதிரான வழக்கை நிராகரிக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து, தேர்தல் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முகாந்திரம் இருப்பதாகவும், எனவே, தேர்தல் வழக்கு விசாரணை தொடரும் எனவும் கூறி நீதிபதி சிவி கார்த்திகேயன் உத்தரவிட்டார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பிறந்த நாள் கொண்டாடிய தோனி…சொத்து மதிப்பு மட்டும் எவ்வளவு தெரியுமா?

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…

15 minutes ago

ராமதாஸுக்கு போட்டியாக நாளை நிர்வாகக் குழு கூட்டத்தை நடத்தும் அன்புமணி!

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

1 hour ago

கூட்டத்தை பார்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜுரம் வரலாம் – எடப்பாடி பழனிசாமி சாடல்!

கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…

2 hours ago

லக்கி பாஸ்கர் 2 நிச்சயம் வரும்… உறுதி கொடுத்த இயக்குநர் வெங்கி அட்லூரி!

ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…

3 hours ago

முருகன் கோயில் குடமுழுக்கு..”என்னை அனுமதிக்கவில்லை”… செல்வப்பெருந்தகை வேதனை!

காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…

3 hours ago

பூனையை பார்த்துக்கோங்க என்னோட சொத்து உங்களுக்கு…ஆஃபர் கொடுத்த சீனா தாத்தா!

குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…

4 hours ago