AIADMK ex-minister Vijayabaskar's petition dismissed! [file image]
பணப்பட்டுவாடா செய்து ஊழல் நடைமுறைகளில் விஜயபாஸ்கர் வெற்றி பெற்றதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு.
தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரிய அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. அதாவது தேர்தலில் பணப்பட்டுவாடா செய்து ஊழல் நடைமுறைகளில் விஜயபாஸ்கர் வெற்றி பெற்றதாக வழக்கு தொடுக்கப்பட்டது.
திமுக வேட்பாளர் எம்.பழனியப்பன் தொடர்ந்த தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி விஜயபாஸ்கர் மனு அளித்திருந்தார். வழக்கை ஆரம்ப கட்டத்திலேயே தள்ளுபடி செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில், 2021 தேர்தலில் தனது வெற்றிக்கு எதிரான வழக்கை நிராகரிக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து, தேர்தல் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முகாந்திரம் இருப்பதாகவும், எனவே, தேர்தல் வழக்கு விசாரணை தொடரும் எனவும் கூறி நீதிபதி சிவி கார்த்திகேயன் உத்தரவிட்டார்.
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…
சென்னை : குரூப் 2, 2ஏ பிரதான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு ஒன்றையும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் சட்டத்துக்குப் புறம்பாக தங்கியுள்ள பாகிஸ்தான் பங்களாதேஷை சேர்ந்தவர்களை வெளியேற்ற தமிழக அரசை வலியுறுத்தியும் பயங்கரவாத தாக்குதலை…
மதுரை : வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு ஐந்து நாட்களாக கொடைக்கானலில் நடைபெற்று வந்தது.…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களும், அவர்களை…