#Breaking:நீட் குழுவுக்கு எதிரான வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..!

Published by
Edison

தமிழக அரசு அமைத்த நீட் குழுவுக்கு எதிராக பாஜக தொடர்ந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு.

தமிழகத்தில் நீட் தேர்வால் மாணவர்கள் அடைந்துள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய,ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.இராஜன் தலைமையில் மொத்தம் 9 பேர் கொண்ட ஒரு குழுவை தமிழக அரசு அமைத்து அரசாணை வெளியிட்டது.

இதனைத் தொடர்ந்து,தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக்கோரி தமிழக பாஜக பொதுச் செயலாளர் கரு. நாகராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மத்திய ,மாநில அரசு இதற்கு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.இதனையடுத்து,நீட் தேர்வு பாதிப்பை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவை எதிர்த்து பாஜக தொடர்ந்த வழக்கு ஜனநாயகத்தை ஒடுக்கும் முயற்சி எனக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில்,”அரசு பள்ளி மாணவர்களுக்கும்,தமிழ் வழியில் படித்தவர்களுக்கும் நீட் தேர்வு பாதிப்பை ஏற்படுத்துகிறதா? என ஆய்வு செய்யவே நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டது.இதில் எந்த அரசியல் சாசனமும் மீறப்படவில்லை.மாநில அதிகாரத்திற்கு உட்பட்டுதான் குழு அமைக்கப்பட்டது.

ஆனால்,மனுதாரர் மாணவரோ? அல்லது பெற்றோரோ? கிடையாது. குறிப்பாக இவர் ஒரு அரசியல் கட்சி நிர்வாகியாக இருக்கையில் எதன் அடிப்படையில் இந்த வழக்கை தொடர முடியும்.எனவே, விளம்பரத்திற்காகவும் ,யூகத்தின் அடிப்படையிலும் பாஜக தொடர்ந்த வழக்கு ஜனநாயகத்தை ஒடுக்கும் முயற்சி”,என தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில்,பாஜக தொடர்ந்த வழக்கை எதிர்த்து மாணவி ஒருவர், திராவிட கழக தலைவர் வீரமணி,விசிக,மதிமுக அமைச்சர் வந்தியதேவன் உள்ளிட்டோர் இடைமனுதாரர்களாக மனுதாக்கல் செய்தனர்.

இந்நிலையில்,இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள்,”வழக்கு தொடர்பாக மத்திய அரசு வரும் 8 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும்”,என்று கூறி விசாரணையை ஜூலை 13 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Published by
Edison

Recent Posts

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…

11 hours ago

“நாங்க ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும்”…சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பேச்சு!

லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…

12 hours ago

அமெரிக்கா கிட்ட பேச்சுவார்த்தையா? வாய்ப்பே இல்லை மன்னிக்கவே மாட்டோம்! ஈரான் திட்டவட்டம்!

தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…

12 hours ago

“பாஜக எப்போதும் மக்கள் பிரச்சனைகளை கையில் எடுக்காது”- சீமான் சாடல்!

சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…

13 hours ago

விஜய் பிறந்த நாள் ஸ்பெஷல் : ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…

15 hours ago

தீவிரமடையும் போர் : இஸ்ரேல் விமான நிலையத்தை குறி வைத்து தாக்கிய ஈரான்!

தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…

15 hours ago