சுகாதாரத்துறை இயக்குனர் அளித்த புகாரின் பேரில், சென்னை குற்றவியல் பிரிவு காவல்துறையினர், டிவி நடிகர் வரதராஜன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சென்னையில் கொரோனா சிகிச்சைக்கு சென்ற தனது நண்பருக்கு போதிய வசதி இல்லை என கருத்துக்களை வீடியோ மூலம் பதிவிட்டவர் டிவி நடிகர் வரதராஜன்.
வீண் வதந்திகளை பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் சுகாதாரத்துறை அமைச்சர் தனது கூறியிருந்தார். மேலும், வதந்தி பரப்பிய டிவி நடிகர் வரதராஜன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை இயக்குனர் கூறியிருந்தார்.
தற்போது சுகாதாரத்துறை இயக்குனர் அளித்த புகாரின் பேரில், சென்னை குற்றவியல் பிரிவு காவல்துறையினர், டிவி நடிகர் வரதராஜன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தொற்று நோய் தடுப்பு சட்டம், வதந்தி பரப்புதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், அவருக்கு சம்மன் அளிக்கப்பட்டு நேரில் அழைத்து விசாரணை நடத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தான் வெளியிட்ட விடியோவுக்கு மறுப்பு தெரிவித்து டிவி நடிகர் வரதராஜன் புதிய விடியோவை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா? கொந்தகையில் கிடைத்த 2 மண்டை ஓடுகள்…
மதுரை : தமிழ்நாட்டின் மதுரையிலிருந்து தென்கிழக்கே 12 கி.மீ தொலைவில் உள்ள கீழடியில் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் பழமையான…
நொட்டிங்காம் : ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20…