விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி போலீஸார் இறுதிக்கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகரில் பட்டியலின பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் ஹரிஹரன், ஜுனத் அகமத், மாடசாமி, பிரவீன் மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் என மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டுள்ள 8 பேர் மீது சிபிசிஐடி போலீசார் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கில் கைதான ஹரிஹரன், ஜுனைத் அகமத் உள்ளிட்ட 4 பேரை சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து 6 நாட்கள் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்நிலையில், பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர்களிடம் பெற்ற வாக்கு மூலங்களை ஆவணப்படுத்தும் பணியில் சிபிசிஐடி போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
காவலில் எடுக்கப்பட்ட ஹரிஹரன், பிரவீன், ஜுனத் அகமது, மாடசாமி ஆகியோரிடம் 5-வது நாளாக சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது. போலீஸ் காவல் நாளை மாலை 5 மணியுடன் முடியும் நிலையில் இன்று இறுதி கட்ட விசாரணையை முடிக்க சிபிசிஐடி திட்டமிடப்பட்டுள்ளது. விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர்களை நீதிமன்ற காவலுக்கு ஒப்படைக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…