[Image Source : FILE PHOTO/ PTI]
தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சாதிய பாகுபாடு காட்டிய 3 பேராசிரியர்களை பணியிட மாற்றம் செய்து கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சிவகங்கை, வியாசர்பாடி, கும்பகோணத்தில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் 3 பேராசிரியர்களை நீலகிரி கூடலூர் கல்லூரிக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
வியாசர்பாடி கல்லூரி பேராசிரியர் ரவி மயிசின், சிவகங்கை கல்லூரி பேராசிரியர் கிருஷ்ணன் மற்றும் கும்பகோணம் அரசு கல்லூரி பேராசிரியர் சரவண பெருமாள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மாணவர்களிடையே சாதிய பாகுபாடு காட்டி மோதல்களை உருவாக்கும் வகையில் செய்யப்பட்டதாக 3 பேராசிரியர்கள் மீது புகார் எழுந்துள்ளது.
இதையடுத்து, சாதிய பாகுபாடு காட்டிய 3 பேராசிரியர்களை பணியிட மாற்றம் செய்து கல்லூரி கல்வி இயக்ககம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், அரசு கல்லுரிகளில் சாதிய பாகுபாட்டில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட பேராசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…
சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…
சென்னை : புழல் மத்திய சிறையில் காவலர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக், மற்றும் போலீஸ் பக்ரூதீன்…
ராஜஸ்தான் : மாநிலம் சுரு மாவட்டத்திற்கு அருகே இந்திய விமானப்படையின் ஜாகுவார் போர் விமானம் ஒன்று பயிற்சியின்போது திடீரென கீழே…
ஈரோடு : மாவட்டம், சிவகிரி அருகே விளக்கேத்தி மேகரையன் தோட்டத்தில் வசித்து வந்த முதிய தம்பதியான ராமசாமி (வயது 72)…