கோவை மாவட்டம் பச்சை மண்டலமாக மாறியுள்ளது என அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9674 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 447 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து கோவை மாவட்டத்தில் மொத்தம் 146 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதில், ஒருவர் உயிரிழந்ததார். மீதம் இருந்த 145 பேர் முழுமையாக குணமாகி வீடு திரும்பினர்.
இதனால் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக கோவை மாறியது. இதைத்தொடர்ந்து, கடந்த 11 நாட்களாக கோவை மாவட்டத்தில் ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. இந்நிலையில், அமைச்சர் வேலுமணி கூறுகையில், கோவையில் கடந்த 2 வாரங்களாக கொரோனா தொற்று இல்லாததால் அம்மாவட்டம் பச்சை மண்டலமாக மாறியுள்ளது என தெரிவித்துள்ளார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…