காவிரி விவகாரம்.! ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி.! தமிழக வாழ்வுரிமை கட்சியினர் அதிரடி கைது.!

Published by
மணிகண்டன்

காவிரியில் இருந்து கர்நாடக அரசு தமிழகத்திற்கு உரிய அளவு தண்ணீரை திறக்க தொடர்ந்து மறுத்து வருகிறது. இதற்காக தமிழக அரசானது காவிரி ஒழுங்காற்று மையம், காவிரி மேலாண்மை வாரியம் , உச்சநீதிமன்றம், மத்திய அரசு என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

முன்னதாக காவிரி ஒழுங்காற்று மையம் பரிந்துரை செய்த 5 ஆயிரம் கனஅடி நீரை திறக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கர்நாடகாவில் நேற்று சுமார் 1500க்கும் மேற்பட்ட கன்னட அமைப்புகள் ஒன்றிணைந்து முழு அடைப்பு போராட்டத்தை நடத்தினர்.

அதே போல தமிழகத்திலும், பல்வேறு பகுதிகளில் காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடக அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசை எதிர்த்தும், அதற்கு துணை போவதாக மத்திய அரசை கண்டித்தும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் அவரது கட்சி தொண்டர்கள் சென்னையில் போராட்டம் நடத்தினர்.

சென்னை , சின்னமலை ராஜீவகாந்தி சிலை அருகே போராட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமை கட்சியினர் நேரடியாக ஆளுநர் மாளிகை நோக்கி செல்ல முயன்றனர். இதனால் அங்கு பெரும் பரப்பரப்பு நிலவியது. இதனை அடுத்து, பேரணியாக செல்ல முயன்ற தமிழக வாழ்வுரிமை கட்சியினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அவர்களை கைது செய்தனர்.

போராட்டத்தின் போது கட்சி தலைவர் வேல்முருகன் கூறுகையில், காவிரியில் இருந்து அவர்களே (கர்நாடக அரசு) நீர் தர மறுத்து அவர்களே போராட்டம், கடையடைப்பு நடத்துகிறார்கள். அனைத்து அணைகளையும் மத்திய அரசு ராணுவ கட்டுப்பாட்டில் கொண்டு வந்து இந்த காவிரி பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்.  அதனால் மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்கும் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்துகிறோம். கர்நாடகாவில் தமிழர்களுக்கு ஏதேனும் நிகழ்ந்தால், அதற்கு தகுந்த எதிர்வினை ஆற்றப்படும் என்றும் அவர் செய்தியாளர்கள் மத்தியில் கூறினார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

10 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

11 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

12 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

12 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

13 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

14 hours ago