கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த சிவராஜ் என்பவர் குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கில் தலைமறைவாக இருந்த நிலையில் செல்போன் சிக்னல் மூலம் பண்ருட்டி பேருந்து நிலையத்தில் சிபிசிஐடி போலீசார் இன்று கைது செய்தனர்.
ஏற்கனவே கடலூர் மாவட்டத்தில் சீனுவாசன், ராஜசேகர் என இரண்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மூன்றாவது நபராக சிவராஜ் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் டி.என்.பி.எஸ்.சி. நடத்திய குரூப்-4 எழுத்துத் தேர்வில் பல முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து டி.என்.பி.எஸ்.சி. நடத்திய அதிரடி விசாரணையில் முறைகேடுகள் நடந்தது உறுதியானது.
இந்த முறைகேட்டில் 99 தேர்வர்கள் ஈடுபட்டது தெரியவர டி.என்.பி.எஸ்.சி அவர்கள் அனைவரும் வாழ்நாள் தேர்வு எழுதுவதற்கு தடைவிதித்தது.இந்நிலையில் டி.என்.பி. எஸ்.சி. செயலாளர் நந்தகுமார், சார்புச் செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் புகார் கொடுத்தனர்.
புகாரின் பேரில் சி.பி.சி.ஐ.டி போலீசார் மூன்று தனிப்படை அமைத்து வழக்குப்பதிவு செய்து குரூப் 4 முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்றுவரை இந்த முறைகேடு வழக்கில் இடைத்தரகர்கள் , முறைகேடு செய்து தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள் என 12 பேரைசி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…