திட்டமிட்டு டார்கெட்.. எதிர்கட்சிகளை மிரட்டுகிறது மத்திய அரசு – ஆர்.எஸ்.பாரதி

Published by
பாலா கலியமூர்த்தி

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திட்டமிட்டு அமைச்சர் செந்தில் பாலாஜியை டார்கெட் செய்கிறார் என ஆர்எஸ் பாரதி பேட்டி.

தமிழகம், கேரளா, தெலுங்கனா, கர்நாடகா உள்ளிட்ட இடங்களில் டாஸ்மாக் மற்றும் மின்துறை அரசு ஒப்பந்ததாரர்கள் அலுவலகம் மற்றும் இல்லங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டது. இதில், சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் 40க்கும் மேற்பட்ட இடங்களில் அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.

இதில் குறிப்பாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்து வருவதாகவும், மேலும், கரூரில் அமைச்சரின் நண்பர், சகோதரர் மற்றும் ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடைபெறுகிறது. இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி, வருமான வரித்துறை, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையை வைத்துக்கொண்டு எதிர்கட்சிகளை மிரட்டுகிறது மத்திய அரசு.

கர்நாடக தேர்தலில் தோல்வியை மறைக்க பார்க்கிறது பாஜக. அனுமன் பெயரை சொல்லி கர்நாடகத்தில் ஆட்சியை பிடிக்க முயன்ற பிரதமரின் முயற்ச்சி தோல்வியில் முடிந்தது. கர்நாடக தேர்தல் முடிவு நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக தேர்தலில் பாஜகவினர் 2,000 நோட்டுகளை தான் விநியோகித்து உள்ளது குறித்து ஆதாரம் கிடைத்துள்ளது. 2024 மக்களவை தேர்தலில் மேன் ஆஃப் தி மேட்சியாக முதலமைச்சர் முக ஸ்டாலின் இருப்பார்.

முதலமைச்சரின் சிங்கப்பூர், ஜப்பான் பயணங்களை திசை திருப்பவே வருமான வரித்துறை சோதனை. பாஜகவை பற்றி தெரிந்து கொள்வீர்கள் என அண்ணாமலை அண்மையில் பகிரங்கமாக பேசி இருந்தார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திட்டமிட்டு அமைச்சர் செந்தில் பாலாஜியை டார்கெட் செய்கிறார். அமைச்சர் செந்தில் பாலாஜியை முடக்க வேண்டும் என்பதற்காகவே வருமான வரித்துறை சோதனை நடக்கிறது. பாஜகவின் தரம் தாழ்ந்த அரசியலையே இது காட்டுகிறது.

முதலமைச்சரின் முயற்சிகள் மக்கள் மத்திய நல்ல விதமாக சென்றும் வரும் நிலையில், பாஜக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது. காவல்துறைக்கு தெரிவிக்காமல் வருமான வரித்துறை சோதனை நடக்கிறது. வருமான வரித்துறை சோதனை பற்றி கவலையில்லை. எத்தனை ரெய்டுகள் வேண்டுமானாலும் நடத்தி கொள்ளட்டும். அதைப்பற்றி கவலையில்லை. திட்டமிட்டு சட்டம் – ஒழுங்கை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுகின்றன என தெரிவித்தார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

திருவள்ளூர் சிறுமி வன்கொடுமை வழக்கு : மேற்குவங்கத்தைச் சேர்ந்த இளைஞர் கைது!

சென்னை : திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில், கடந்த ஜூலை 12, 2025 அன்று 8 வயது சிறுமி பள்ளி…

17 minutes ago

திரைப்படமாக உருவாகும் ராமதாஸ் பயோபிக்..! படக்குழு வெளியிட்ட போஸ்ட்டர்கள்..!

சென்னை :  பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க.) நிறுவனர் டாக்டர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு, இயக்குநர் சேரன் இயக்கத்தில் ‘அய்யா’…

44 minutes ago

பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை!

பீகார் :  மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் கீழ், இந்திய தேர்தல் ஆணையம் 65.20 லட்சம்…

1 hour ago

கேரளா : மத்திய சிறையில் இருந்து தப்பி ஓடிய ஆயுள் தண்டனை கைதி…காவல்துறையிடம் சிக்கியது எப்படி?

கேரளா : மாநிலம் கண்ணூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த குற்றவாளி கோவிந்தசாமி இன்று 25 அடி உயர…

3 hours ago

பிரதமர் மோடி வருகை தமிழகத்திற்குப் பெருமை – அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு!

சென்னை : அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில், மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் மற்றும் அவரது கங்கை வெற்றியின் ஆயிரமாவது ஆண்டு…

3 hours ago

உல்லு, ஆல்ட் உள்பட ஆபாச OTT தளங்களுக்கு தடை! மத்திய அரசு அதிரடி!

டெல்லி: மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் (MIB), ULLU, ALTT, Big Shots, Desiflix, Hulchul, NeonX VIP…

3 hours ago