வரும் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிடும் தொகுதி மாற்றப்பட்டுள்ளதாக அக்கட்சி தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சட்டமன்ற பொதுத்தேர்தலில் தேமுதிக சார்பில் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த பா.மாதவன் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக திரு.M.சிவக்குமார் (மாவட்ட கழக அவைத்தலைவர்) நியமிக்கப்படுகிறார் என்று இன்று காலை தலைவர் விஜயகாந்த் அறிவித்திருந்தார்.
அமமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக 60 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதற்கான தொகுதி மற்றும் வேட்பாளர் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டது. அதில் கீழ்வேலூர் தனி தொகுதியில் ஆர்.பிரபாகரன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், கீழ்வேளூருக்கு பதிலாக தஞ்சாவூர் தொகுதி மாற்றப்பட்டுள்ளது என்று விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், கீழ்வேளூர் தனி தொகுதியில் அமமுக போட்டியிடுவது என்று ஒருமித்த கருத்துடன் முடிவு எடுத்துள்ளதாகவும், அதற்கு பதிலாக மாற்று தொகுதி அடிப்படையில் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்ட தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக பா.ராமநாதன் (டீ தஞ்சாவூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர்) நியமிக்கப்படுகிறார் என தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்று (ஜூலை 9, 2025) இந்தியா முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு…
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…