வரும் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிடும் தொகுதி மாற்றப்பட்டுள்ளதாக அக்கட்சி தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சட்டமன்ற பொதுத்தேர்தலில் தேமுதிக சார்பில் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த பா.மாதவன் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக திரு.M.சிவக்குமார் (மாவட்ட கழக அவைத்தலைவர்) நியமிக்கப்படுகிறார் என்று இன்று காலை தலைவர் விஜயகாந்த் அறிவித்திருந்தார்.
அமமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக 60 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதற்கான தொகுதி மற்றும் வேட்பாளர் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டது. அதில் கீழ்வேலூர் தனி தொகுதியில் ஆர்.பிரபாகரன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், கீழ்வேளூருக்கு பதிலாக தஞ்சாவூர் தொகுதி மாற்றப்பட்டுள்ளது என்று விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், கீழ்வேளூர் தனி தொகுதியில் அமமுக போட்டியிடுவது என்று ஒருமித்த கருத்துடன் முடிவு எடுத்துள்ளதாகவும், அதற்கு பதிலாக மாற்று தொகுதி அடிப்படையில் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்ட தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக பா.ராமநாதன் (டீ தஞ்சாவூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர்) நியமிக்கப்படுகிறார் என தெரிவித்துள்ளார்.
சென்னை : சமீபகாலமாக நடிகர் விஷாலுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பது ஒரு சோகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கடந்த ஜனவரி…
மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக…
மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…
செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…