உயர்நீதிமன்றத்தை இழிவாக பேசிய ஹெச்.ராஜாவுக்கு எதிராக இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாதது ஏன்.? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கடந்த 2018-ல் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே விநாயகர் சிலை ஊர்வலம் செல்லத் தடை விதித்த காவல்துறையினருடன் பா.ஜ.க. தேசிய செயலாளராக இருந்த ஹெச்.ராஜா வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. அந்த வீடியோவில் ஹெச்.ராஜா காவல்துறையிடம் உயர்நீதிமன்றத்தையும், காவல்துறையையும் மிக மோசமாகப் பேசியிருந்தார்.
இதைத்தொடர்ந்து, இந்த விவகாரத்தில் ஹெச். ராஜா உள்ளிட்ட 18 பேர் மீது திருமயம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், ஹெச்.ராஜாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என தந்தை பெரியார் திராவிடர் கழகம் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரித்த நீதிமன்றம், உயர்நீதிமன்றத்தை இழிவாக பேசிய ஹெச்.ராஜாவுக்கு எதிராக இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாதது ஏன்..? ஏப்ரல் 27-க்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு பாயும் என காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஹெச்.ராஜாவுக்கு எதிராக 2 மாதங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. ஆனால், 3 மாதங்கள் கடந்தும் போலீசார் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் நீதிபதி ஹேமலதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கர்நாடகா : நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் 3 பேரை குற்றவாளிகள்…
சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…
சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும்…
சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல' என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.…
சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…