Anna University Semester Exam Result [File Image-]
உறுப்பு கல்லூரிகளில் 351 உதவி பேராசிரியர் காலி இடங்களை நிரப்ப வரைவு அறிவிப்பாணையை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டுள்ளது. ஒப்பந்தம் ஆசிரியர்கள் பணி நிரந்தரம் கோரிய மேல்முறையீட்டு வழக்கில் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
AICTE விதிப்படி, 16 உறுப்பு கல்லூரிகளில் உள்ள 351 காலி பணியிடங்களை நேரடி தேர்வு மூலம் நிரப்ப உள்ளதாகவும், அதில் தற்காலிக ஆசிரியர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்குவது குறித்தும் முடிவெடுக்கப்படும் எனவும் சென்னை ஐகோர்ட்டில் அண்ணா பல்கலைக்கழகம் விளக்கமளித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து, ஒப்பந்தம் ஆசிரியர்கள் பணி நிரந்தரம் கோரிய மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை வரும் 12ம் தேதிக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், சி.குமரப்பன் ஒத்திவைத்தனர். 2010-11ல் மாதம் ரூ.20,000 தொகுப்பூதியத்தில் ஒப்பந்தம் அடிப்படையில் நியமித்த ஆசிரியர்கள் பணி நிரந்தரம் கோரி வழக்கு தொடர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…