காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.., இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.!
ரெயாலா முர்ச்சனா சாலையில் உள்ள பள்ளத்தாக்கில் சென்று கொண்டிருந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில் இரண்டு வீரர்கள் உயிரிழந்தனர் மற்றும் இரண்டு பேர் காயமடைந்தனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அவர்கள் பயணித்த ராணுவ வாகனம் கர்னாவின் டீத்வால் பகுதியில் உள்ள ரெயாலா முர்ச்சனா சாலையில் உள்ள பள்ளத்தாக்கில் சென்று கொண்டிருந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.
அப்பொழுது, இரண்டு வீரர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்றும், இருவர் காயமடைந்து அருகில் இருந்த ராணுவ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்று ராணுவ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளதாக பிடிஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த ஞாயிறன்றும், இதேபோன்ற சாலை விபத்தில் 3 வீரர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.