1137 மிமீ மழை… 363 தேங்கிய பகுதிகள்.. 1512 மரங்கள்… புள்ளி விவரங்களை வெளியிட்ட சென்னை மாநகராட்சி.!

Published by
மணிகண்டன்

Michaung Cyclone : வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை வெகுவாக பாதித்தது. மழை பெய்து 6 நாட்கள் கடந்தும் இன்னும் சென்னை புறநகர் பகுதியில் மழைநீர் தேங்கி நிற்கிறது. அதனை வெளியேற்ற ஊழியர்கள் முயற்சித்து வருகின்றனர்.  அங்குள்ள மக்கள் தங்கள் அன்றாட தேவைக்கே மிகுந்த சிரமத்திற்குள்ள்ளாகி உள்ளனர்.

இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் மிக்ஜாம் புயல் – மழைநீர் பாதிப்பு குறித்து , மாநகராட்சி நிர்வாகம் தரவுகளை வெளியிட்டுள்ளது . அதன்படி, கடந்த அக்டோபர் 21 முதல் டிசம்பர் 8 வரையில் சென்னை மாநகராட்சியில் 1136.85 மிமீ மழையளவு பதிவாகியுள்ளது . 8.12.2023 முதல் 9.12.2023 வரையில் 0.85 மிமீ மழையளவு பதிவாகியுள்ளது.

புயல் பாதிப்பு நிவாரணம்.! வங்கி கணக்கு எண்ணை அறிவித்த தமிழக அரசு.!

ரெட்ஹில்ஸ், சோழவரம்,  செம்பரம்பாக்கம், பூண்டி ஆகிய நீர்நிலைகள் முழுதாக நிரம்பி தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வந்ததது.  மொத்தமாக சென்னை மாநகராட்சியில் 363 இடங்களில் தண்ணீர் தேங்கியது. அதில் 328 இடஙக்ளில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு விட்டது . மீதம் வடசென்னையில் 14 இடங்கள் , தென் சென்னையில் 21 இடங்கள் என மொத்தமாக 35 இடங்களில் மட்டுமே தண்ணீர் தேங்கி உள்ளது .

மிக்ஜாம் புயலில் 1512 மரங்கள் விழுந்துள்ளன. 1302 மரங்கள் அகற்றப்பட்டு விட்டன. 210 மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. மொத்தம் 22 சுரங்கபாதைகளில் தண்ணீர் தேங்கி இருந்தது. அவை தற்போது அகற்றப்பட்டுள்ளது. மொத்தம் 1178 மோட்டார் பம்புகள் இயக்கத்தில் உள்ளன.  110 ஜேசிபி எந்திரங்கள் இயக்கத்தில் உள்ளன.

இன்று 748 இடங்களில் மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இதில் 52751 பேர் பயனடைந்துள்ளனர்.  மொத்தமாக 12713 ஊழியர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 2337 வெளியூர் ஊழியர்கள் பணி செய்து வருகின்றனர். 39 மீட்பு படகுகள் செயல்பாட்டில் உள்ளது.  14,598 பால் பாக்கெட்டுகள், 2,62,608 பிரெட் பாக்கெட்கள், 63,615 பால் பவுடர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என சென்னை மாநகராட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

Recent Posts

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

2 hours ago

இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!

பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…

2 hours ago

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

3 hours ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

4 hours ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

5 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

5 hours ago