சென்னையில் பாய்லர் வெடித்த பயங்கர விபத்தில் ஒருவர் பலி.!

Published by
கெளதம்

சென்னை தண்டையார்பேட்டை உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் (IOC) எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பாயிலர் வெடித்து ஊழியர் பெருமாள் பரிதாபமாக உயிரிழந்தார். இன்று பிற்பகல் 12 மணியளவில் பயங்கர சத்தத்துடன் பாயிலர் வெடித்ததாக கூறப்படுகிறது.

இதனால், அச்சமடைந்த ஊழியர்களும் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொது மக்களும் அலறியடித்து ஓடினர். அப்போது, பாயிலர் அருகே பணிபுரிந்து வந்த ஒப்பந்த தொழிலாளர்களான பெருமாள் மற்றும் 2 பேர் விபத்தில் சிக்கினர்.

பாயிலர்  வெடித்ததை தொடர்ந்து, மற்ற ஊழியர்கள் அலறி அடித்து வெளியே ஓடி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது, விபத்தில் சிக்கிய மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டநிலையில், அதில் கரிமேடு பகுதியை சேர்ந்த பெருமாள் (52) என்பவர் உயிரிழந்துள்ளார்.

எண்ணூர் அமோனியா வாயுக்கசிவு: பாதுகாப்பு தணிக்கை சான்றிதழ் அவசியம் – அன்புமணி ராமதாஸ்!

ஏற்கனவே, நேற்றிரவு எண்ணூர் அருகே உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவைத் தொடர்ந்து, இந்த விபத்து ஏற்பட்டுள்ளதால் வடசென்னை பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Recent Posts

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…

4 hours ago

”தமிழக மீனவர்களை மீட்க” – அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…

4 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்க – தவெக.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

5 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., ஜெய்பீம் படம் பார்த்த முதல்வர் எங்கே? – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…

5 hours ago

பூரி ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழப்பு.., ரூ.25 லட்சம் நிவாரணம்.!

ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…

6 hours ago

”மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – அமைச்சர் சிவசங்கர்.!

சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…

8 hours ago