சென்னையில் உள்ள கிண்டி, மேற்கு மாம்பழம் ஆகிய பகுதிகளில் வீடுகளுக்கு வெளியில் நிற்க வைத்திருந்த இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருடு போய் இருந்துள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார் செய்து வந்துள்ளன. இது தொடர்கதையாகவே போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
இதற்காக 50க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து புருசோத்தமன் என்பவரை கைது செய்தனர். அவர் சைதாப்பேட்டையில் ரயில் நிலையம்அருகே வசித்து வந்துள்ளார். இவர் லாரி ஓட்டுனராக பணியாற்றி வந்துள்ளார். ஆனால், குடிப்பழக்கம் அதிகமானதால் கடந்த ஒரு வருடமாக வேலைக்கு செல்வதில்லை. மாறாக, அவ்வப்போது இருசக்கர வாகனத்தை திருடி, அதனை மதுபான கடையில் இருக்கும் யாருக்கேனும் 1000, 2000 ரூபாய்க்கு விற்பனை செய்துவிடுகிறார்.
இந்த தகவல்கள் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. பின்னர் அவர் திருடிய 14 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தற்போது அந்த போதை ஆசாமி சிறையில் உள்ளார்.
டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…